திரிபங்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபங்கா
இயக்கம்ரேணுகா சஹானே
தயாரிப்பு
  • அஜய் தேவ்கான்
  • தீபக் தார்
  • சித்தார்த் பி. மல்ஹோத்ரா
  • பராக் தேசாய்
  • ரிசி நேகி
  • சப்னா மல்கோத்ரா
கதைரேணுகா சஹானே
இசைசஞ்சய் சௌத்ரி
நடிப்பு
ஒளிப்பதிவுபாபா ஆஸ்மி
படத்தொகுப்புஜபீன் மெர்ச்சண்ட்
கலையகம்
  • அஜய் தேவ்கன் பிலிம்ஸ்
  • பானிஜெய்
  • அல்கெமி புரோடக்சன்ஸ்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடு15 சனவரி 2021 (2021-01-15)
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழி
  • இந்தி
  • ஆங்கிலம்
  • மராத்தி

திரிபங்கா:தேதி மேதி கிரேஸி (Tribhanga: Tedhi Medhi Crazy)என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய மும்மொழி குடும்ப நாடகத் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை ரேணுகா ஷாஹனே எழுதி இயக்கியுள்ளார்.[1] அஜய் தேவ்கன் எஃப் ஃபிலிம்ஸ், பனிஜய் ஆசியா மற்றும் அல்கெமி புரொடக்சன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்ஒகளின் கீழ் அஜய் தேவ்கண், தீபக் தார் மற்றும் சித்தார்த் பி. மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து பராக் தேசாய், ரிஷி நேகி மற்றும் சப்னா மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து தயாரித்தனர். கஜோல், தன்வி ஆஸ்மி மற்றும் மிதிலா பால்கர் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், மூன்று பெண்கள் கொண்ட ஒரு செயலற்ற குடும்பத்தையும் அவர்களின் வழக்கத்திற்கு மாறான வாழ்க்கைத் தேர்வுகளையும் சுற்றி வருகிறது.

ஷாஹனேவுக்கு 2014 ஆம் ஆண்டில் திரிபங்காவினை உருவாக்குவதற்கனா யோசனை கிடைத்தது. அது அவரது தாயுடனான அவரது உறவால் தூண்டப்பட்டது. முதன்மை படப்பிடிப்பு எடுத்தல் அக்டோபர் 2019 இல் தொடங்கியது, இது முழுவதுமாக மும்பையில் பாபா ஆஸ்மியால் படமாக்கப்பட்டது. சஞ்சாய் சவுத்ரி இசையமைத்த இப்படத்திற்கான படத்தொகுப்பினை ஜபீன் மெர்ச்சன்ட் செய்தார். 2021 ஜனவரி 15 அன்று வெளியான இந்தப் படம், நெட்ஃபிக்ஸ் இல் கஜோலின் அறிமுகத் திரைப்படமாகியது. விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்தை பொதுவாக நேர்மறையானதாக மதிப்பிட்டனர், பெரும்பாலும் ஷாஹனேவின் இயக்கம் மற்றும் முன்னணி நடிகர்களின் நடிப்பைக் குறித்து பாராட்டினர்.

2021 பிலிம்பேர் OTT விருதுகளில், திரிபங்கா 3 பரிந்துரைகளைப் பெற்றது. ஒரு அசல் வலைத்தளத்திற்கான பட சிறந்த நடிகை (கஜோல்) மற்றும் ஒரு வலை அசல் படத்தில் சிறந்த துணை நடிகை (ஆஸ்மி மற்றும் பால்கர்) ஆகியவை அடங்கும்.

கதைக்களம்[தொகு]

மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கைப் பயணத்தை இந்தப் படம் பின்தொடர்கிறது, அவர்கள் ஒருவருக்கொருவர் ஆழமான நிலையில் தொடர்புகொண்டுள்ளனர். மூவரில் மூத்தவரான நயன் கோமா நிலைக்குச் சென்றதும், அவரது மகள் மற்றும் பேத்தி அவரது சுயசரிதைக்கு பங்களிக்க முடிவு செய்யும் போது அவர்களின் கடந்த காலத்தின் தொந்தரவளித்த சூழல்கள் குறித்த விவரங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

நயன்தாரா ஆப்தே ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், அவர் மூட்டுவலியை எதிர்கொள்வதால் இனி எழுத முடியாது என்ற நிலையிலிருக்கிறார். மிலன், அவரது சீடரும் எழுத்தாளருமான அவரது சுயசரிதையை எழுதுவதில் அவருக்கு உதவுகிறார்.

மது அருந்துவதால், நயன் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவரது மகள் அனு (பிரபல பாலிவுட் நடிகையும் ஒடிசி நடனக் கலைஞருமான அனுராதா) தனது மகள் மாஷாவுடன் மருத்துவமனைக்கு விரைகிறார் என்றும் உணர்த்தப்படுகிறது. ஊடகங்கள் அவரைச் சுற்றி வளைத்து கேள்விகளால் எதிர்கொள்கின்றன, அதை அவர் புறக்கணிக்கிறார்.

அங்கு மிலனின் இருப்பைக் கண்டு அவள் எரிச்சலடைந்து அவரை உதாசீனம் செய்தும் கடிந்தும் பேசுகிறார். அவருக்கு அவரது சகோதரர் ராபிந்த்ரோ உதவுகிறார். தங்கள் வாழ்க்கையை, குறிப்பாக அனுராதாவின் வாழ்க்கையை அழித்ததற்காக நயனை வெறுக்கிறோம் என்று உடன்பிறப்புகள் சொல்வதை மிலன் கேட்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kajol to make her digital debut with Ajay Devgn production Tribhanga". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-10. Archived from the original on 2 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபங்கா_(திரைப்படம்)&oldid=3919340" இலிருந்து மீள்விக்கப்பட்டது