தன்னம்பிக்கை (இதழ்)
Jump to navigation
Jump to search
தன்னம்பிக்கை | |
---|---|
துறை | வாழ்வியல் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | டாக்டர் க. கலைச்செல்வி |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகத்தார் | க. கலைகண்ணன் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | திங்கள் இதழ் |
இணைப்புகள் | |
|
தன்னம்பிக்கை என்னும் இதழ் தமிழ் நாட்டின் கோயமுத்தூர் நகரில் இருந்து வெளிவரும் சுயமுன்னேற்ற திங்கள் இதழாகும். கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய முனைவர் இல. செ. கந்தசாமி என்பவரால் 1989 ஆம் ஆண்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் இல. செ. க.வின் தன்னம்பிக்கை என்னும் பெயரில் வெளிவரும் இதழ் முத்திரைத்தொடர் முன்னேற்றத்தின் மூலதனம் என்பது ஆகும்.
ஆசிரியர் குழு[தொகு]
இவ்விதழில் டாக்டர் க. கலைச்செல்வி ஆசிரியராகவும் டாக்டர் பெரு. மதியழகன் கெளரவ ஆசிரியராகவும் என். செல்வராஜ் இணை ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.[1]
சான்றடைவு[தொகு]
- ↑ தன்னம்பிக்கை, முயற்சி:22, வெற்றி:11, நவம்பர் 2011, பக்.3