டி. கே. பாலச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. கே. பாலச்சந்திரன்
பிறப்பு(1928-02-02)2 பெப்ரவரி 1928
இறப்பு15 திசம்பர் 2005(2005-12-15) (அகவை 77)
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1950–1995
பெற்றோர்வஞ்சியூர் பி. கே. குஞ்சன் பிள்ளை - பருக்குட்டியம்மா
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி
பிள்ளைகள்வசந்த் , வினோத்
உறவினர்கள்வஞ்சியூர் மாதவன் நாயர் (சகோதரர்)

டி. கே. பாலச்சந்திரன் என்பவர் ஒரு இந்திய நடிகர். அவர் முக்கியமாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றினார். 200க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறையில் தயாரிப்பு, உரையாடல், கதை, திரைக்கதை என பலதுறைகளில் பங்களிப்பு செய்துள்ளார். பாலச்சந்தருக்கு மலையாள திரைப்பட வரலாற்றில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர் என்ற பெருமையுள்ளது.

குடும்பம்[தொகு]

பாலச்சந்திரன் குஞ்சன் பிள்ளைக்கும் பருக்குட்டியம்மாவுக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

பாலச்சந்திரன், விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வசந்த், வினோத் என்ற இரு மகன்கள் இருந்தனர். நடிகர் வஞ்சியூர் மாதவன் நாயர் இவரது மூத்த சகோதரர்.[1]

திரைத்துறை[தொகு]

பாலச்சந்திரன் 1940 இல் "பிரஹலாதா" திரைப்படத்தில் நடித்தார். அப்போது இவருக்கு பதிமூன்றே வயதாகும். 1968 ஆம் ஆண்டில், மலையாள திரைத்துறையின் முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படமான விருதன் ஷங்குவில் நடித்தார்.

தமிழ்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "malayalamcinema.com, Official website of AMMA, Malayalam Film news, Malayalam Movie Actors & Actress, Upcoming Malayalam movies". www.malayalamcinema.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._பாலச்சந்திரன்&oldid=3715905" இலிருந்து மீள்விக்கப்பட்டது