ஞாயிற்றுச்சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞாயிற்றுச்சோழன் சிலப்பதிகாரம் குறிப்பிடும் சோழ அரசன் ஆவான். இவனின் மகள் மணக்கிள்ளி என்பவள் சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி. கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் தாயைச் சிலப்பதிகாரம் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் என்று குறிப்பிடுகிறது. [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் ... செங்குட்டுவன். - சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக் காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாயிற்றுச்சோழன்&oldid=2486138" இலிருந்து மீள்விக்கப்பட்டது