ஜவலாகர் உமா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவலாகர் உமா தேவி
நீதிபதி-ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 சனவரி 2017
பரிந்துரைப்புசகதீசு சிங் கேகர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 செப்டம்பர் 1959 (1959-09-26) (அகவை 64)
அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிஸ்ரீ கிருஷ்ணதேவராயார் பல்கலைக்கழகம்

ஜவலாகர் உமா தேவி (Javalakar Uma Devi) (பிறப்பு: செப்டம்பர் 26,1959) இந்தியா ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1] இவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்த சமூக ஊடக பதிவுகளை விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு (இந்தியாவின் கூட்டாட்சி புலனாய்வு நிறுவனம்) உத்தரவிட்ட 2020ஆம் ஆண்டு வழக்கு அடிப்படையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் ஆந்திரப் பிரதேச காவல்துறை நீதித்துறையைத் தாக்க அரசியல் பிரமுகர்களுடன் ஒத்துழைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

வாழ்க்கை[தொகு]

உமா தேவி 1959ஆம் ஆண்டில் ஆந்திராவின் அனந்தபூரில், ஜவலாகர் ஞானோபா ராவ் மற்றும் ஜவலாகர் துளசிபாய் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். 1982ஆம் ஆண்டில் அனந்தபூரில் உள்ள சிறீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தில் வணிகத்தில் இளங்கலை பட்டமும், 1986ஆம் ஆண்டில் அனந்தாப்பூரில் உள்ள சிறீ கிருஷ்ணதேவராய பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[1] சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தொழில்[தொகு]

உமா தேவி 1986ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச வழக்கறிஞர் கழகத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் அனந்தபூரில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார். 1996ஆம் ஆண்டில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், கர்னூல், மதனப்பள்ளி, வாரங்கல், விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்து உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.[1] இவர் ஐதராபாத்தில் உள்ள சிறிய பிரச்சனைகளுக்கான நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சனவரி 2017 அன்று, இவர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1]

காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் ஆந்திரப் பிரதேச நீதித்துறையை சமூக ஊடகங்களில் விமர்சித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2020இல், உமா தேவி மற்றும் மற்றொரு நீதிபதி ராகேஷ் குமார் ஆகியோர் இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) க்கு இந்த சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டனர்.[2] தேவி மற்றும் குமார் ஆகியோர் இரண்டு மாதங்களில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதாவது குற்றவியல் செயல்முறையைத் தொடங்கும் ஒரு காவல்துறை ஆவணம், இந்த சமூக ஊடக இடுகைகளை உருவாக்கும் நபர்களுக்கு எதிராகத் தயாரிக்க உத்தரவிட்டார்.தேவி மற்றும் குமார் ஆகியோர் இந்த விமர்சனங்களை "குடியரசு தத்துவத்திற்கு ஆபத்தானது" என்று விவரித்தனர்.[3] இந்த உத்தரவு பரவலாக அறிவிக்கப்பட்டது.[4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Hon'ble Mrs. Justice J. Uma Devi". Andhra Pradesh High Court.
  2. "Andhra Pradesh HC orders CBI probe over social media posts against the Judiciary". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
  3. "Andhra HC orders CBI probe into anti-judiciary remarks by YSRCP leaders". mint (in ஆங்கிலம்). 2020-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
  4. PTI (2020-10-13). "Andhra Pradesh HC orders CBI probe into posts against judges on social media". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
  5. "Andhra Pradesh HC Says Persons in High Posts 'Waging War' Against Judiciary, Orders CBI Probe". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
  6. "Andhra HC orders CBI to act against YSR leaders, others who attacked judges on social media". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-10-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
  7. Service, Tribune News. "Andhra Pradesh HC orders CBI probe into social media comments by YSRCP leaders". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவலாகர்_உமா_தேவி&oldid=3905224" இலிருந்து மீள்விக்கப்பட்டது