சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழன் நெய்தலங்கானல் இளச்சேட்சென்னி என்பவன் சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான். இவனைஊன்பொதி பசுங்குடையார் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. [1]

நெய்தலங்கானல் என்னுமிடத்தில் இருந்துகொண்டு ஆண்ட இவனைப் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோன்’ எனக் குறிப்பிடுகிறார். நெடியோன் என்னும் பெயர் திருமாலைக் குறிக்கும்.

இவன் இயல்பு
இவன் மற்போரில் வல்லவன். [2]
கொடை
மணக்க மணக்கத் தாளித்த அமிழ்தம் போன்ற உணவை வந்தவர் யாராயிந்தாலும் வழங்கினான்.
இவனுக்குப் புலவர் கூறிய அறிவுரை
  • வழிபடுவோர் உள்ளத்தைப் புரிந்துகொள்.
  • மற்றவர்களைப் பழிப்பவர் சொல்லை நம்பாதே.
  • உண்மை கண்டபின் தண்டனை வழங்கு
  • வணங்கினால் தண்டனையைக் குறைத்துக்கொள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 10
  2. இவனது மார்பை மகளிர் அல்லது மற்றையோர் தழுவியதில்லையாம்.