செயசிம்மன் (காலச்சூரி வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயசிம்மன்
தஹாலாவின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 1163-1188 பொ.ச
முன்னையவர்நரசிம்மன்
பின்னையவர்விசயசிம்மன்
துணைவர்கோசலாதேவி, கெல்கனாதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
விசயசிம்மன்
அரசமரபுதிரிபுரியின் காலச்சூரிகள்
தந்தைகயகர்ணன்

செயசிம்மன் (Jayasimha) (ஆட்சி; பொ.ச. 1163-1188) திரிபுரியின் காலச்சூரி வம்சத்தின் மன்னனாவான். மத்திய இந்தியாவில் இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம் ) மையமாகக் கொண்டிருந்தது. இவன் இரத்தினபுரியின் காலச்சூரிகள் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்று சந்தேலர்களுக்கு எதிராக தோல்வியடைந்ததாகத் தெரிகிறது.

ஆட்சி[தொகு]

செயசிம்மன் காலச்சூரி மன்னன் கயகர்ணனின் மகனாவான். மேலும் தனது மூத்த சகோதரன் நரசிம்மனுக்குப் பிறகு அரியணை ஏறினான். [1] முன்னதாக திரிபுரி காலச்சூரிகளின் அடிமைகளாக பணியாற்றிய இரத்தினபுரியின் காலச்சூரிகள் கயகர்ணனின் ஆட்சியின் போது சுதந்திரத்தை அறிவித்தனர். செயசிம்மன் அவர்களைக் கட்டாயப்படுத்த ஒரு போரை வழிநடத்தினான். [1] சிவ்ரிநாராயணன் என்ற இடத்தில் ஒரு போர் நடந்தது. அதில் செயசிம்மன் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. [2]

பரமார்டியின் மஹோபா கல்வெட்டின்படி, சந்தேல மன்னன் பரமார்டிக்கு எதிராகவும் செயசிம்மன் தோல்வியடைந்தான். எவ்வாறாயினும், கைமூர் மலைத்தொடரின் வடக்கே உள்ள தமசா ஆற்றுப் பள்ளத்தாக்கின் கட்டுப்பாட்டை இவன் தக்க வைத்துக் கொண்டான். அதை இவனது சகோதரன் சந்தேலர்களிடமிருந்து மீட்டான். இப்பகுதியானது கர்கரேடியில் (நவீன ரேவா மாவட்டத்திலுள்ள கக்ரேடி) ஆட்சி செய்த இவனது நிலப்பிரபுத்துவ மகாரானக கீர்த்திவர்மனால் ஆளப்பட்டது. [2]

சொந்த வாழ்க்கை[தொகு]

கோசலாதேவி , கெல்கனாதேவி என்ற இரு மனைவிகள் இவனுக்கிருந்தனர். கோசலாதேவி ஜபல்பூருக்கு அருகில் கோசல்பூர் என்ற நகரத்தை நிறுவினாள். செயசிம்மனுக்குப் பிறகு கோசலாதேவிக்குப் பிறந்த இவனது மகன் விசயசிம்மன் ஆட்சிக்கு வந்தான். தம்பதியருக்கு அசயசிம்மன் என்ற மற்றொரு மகனும் இருந்தான். [2] செயசிம்மனின் இராஜகுரு (அரச ஆசான்) விமல-சிவா என்பவராவார். [3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 V. V. Mirashi 1957, ப. 495.
  2. 2.0 2.1 2.2 V. V. Mirashi 1957, ப. 496.
  3. R. K. Sharma 1980, ப. 84.

உசாத்துணை[தொகு]