சும்பன் - நிசும்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்ப - நிசும்பர்களைப் போரில் வெல்லும் துர்கை

சும்பன் - நிசும்பன் (Sumbha and Nisumbha), என்பவர்கள் அசுர உடன் பிறப்புகள் ஆவார். இந்து சமயத்தில் தேவி துர்கையின் வீர தீரச் செயல்களைப் போற்றிப் பாடும் தேவி மகாத்மியம் எனும் நூலில் சும்ப - நிசும்பர்களை தேவி சக்தியின் வடிவான துர்கை போரிட்டுக் கொல்லும் நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

தேவி மகாத்மிய நூலில்[தொகு]

புஷ்கர் எனுமிடத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கடும் தவம் நோற்று எவராலும் கொல்லப்படாத மற்றும் மூவுலகையும் ஆட்சி செய்யும் வரத்தையும், பெண்னால் தவிர பிற எவராலும் மரணம் நேரக் கூடாது என்ற வரத்தையும் பிரம்மனிடமிருந்து பெற்றவர்கள்.[1][2] சும்ப - நிசும்பர்களை தேவர்களின் தலைவனான இந்திரனை வென்று தேவலோகத்தையும், நாகர்களை வென்று பாதாள லோகத்தையும், மன்னர்களை வென்று முழு பூமியையும் கைப்பற்றி ஆண்டனர். முனிவர்களும் மற்றவர்களும் தவம் நோற்க அனுமதிக்கப்படவில்லை. மீறி தவமிருப்பவர்களை கொன்று குவித்தனர்.

சும்பன் - நிசும்பரிகளின் உதவியாளர்களான சண்டன் - முண்டன் எனும் அசுர ஒற்றர்கள், தேவியின் அழகைக் குறித்து சும்ப - நிசும்பர்களிடம் எடுத்துரைத்தனர். தேவியின் அழகை, வர்ணிப்பிலேய மயங்கிய சும்ப - நிசும்பர்கள், தேவியை தம்மிடம் அழைத்து வர சுக்ரீவன் எனும் அசுரனை அனுப்பி வைத்தனர். சுக்ரீவனின் அழைப்பை ஏற்க மறுத்த தேவியை, வலுக்கட்டாயமாக தூக்கி வர சண்டன் மற்றும் முண்டன் எனும் அசுரர்களை அனுப்பி வைத்தனர். சண்டன் - முண்டர்களை சிங்க வாகனத்தில் அமர்ந்திருந்த தேவி தனது வாளால் கொன்று குவித்தாள்.[2]

இறப்பு[தொகு]

தங்களுக்கு பெண்களால் மட்டுமே மரணம் நேரிடும் என்ற வரத்தை முற்றாக மறந்த சும்ப - நிசும்பர்கள், தேவியை நேரில் சென்று சந்தித்துப் போரிட முடிவு செய்தனர். துர்கைக்கும் - சும்ப நிசும்பர்களுக்கு இடையே நடந்த போரில், தேவி முதலில் நிசும்பனை வதைத்தாள்.[3]

பின்னர் கொடூரமாக எதிர்த்து வந்த சும்பனை, தேவி தனது திரிசூலத்தால் கொன்றாள். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Devi Mahatmya Navrathri Katha - Chapter 1 to 13". S-a-i.info. Archived from the original on 2008-10-03. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
  2. 2.0 2.1 "The Devi". Sdbbs.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
  3. "Sri Durga Saptasati or The Devi Mahatmya". Sivanandaonline.org. Archived from the original on 2010-06-16. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
  4. "Sri Durga Saptasati or The Devi Mahatmya". Sivanandaonline.org. Archived from the original on 2010-06-16. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்பன்_-_நிசும்பன்&oldid=3823962" இலிருந்து மீள்விக்கப்பட்டது