சுகேந்தர் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுகேந்தர் ரெட்டி, தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டில், வெங்கட ரெட்டி, சரஸ்வதம்மா ஆகியோருக்கு பிறந்தார். இவர் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் 1999-ஆம் ஆண்டில் தொடங்கிய பதின்மூன்றாவது மக்களவையிலும், 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகேந்தர்_ரெட்டி&oldid=3554926" இலிருந்து மீள்விக்கப்பட்டது