உத்தரகாண்டம் (ஒட்டக்கூத்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:

{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
{{விக்கியாக்கம்}}

"உத்தரகாண்டம்" என்பது [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தின்]] இறுதிக் காண்டமாக [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரால்]] இயற்றப்பட்டது.
'''உத்தரகாண்டம்''' என்பது [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தின்]] இறுதிக் காண்டமாக [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரால்]] இயற்றப்பட்டது.<ref>[http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=271&pno=59 இராமாயண உத்தரகாண்டம், பக்கம் 59]</ref>


கம்பர் தம் இராமாயணத்தைப் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன் வீடணன் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.
கம்பர் தம் இராமாயணத்தைப் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன் வீடணன் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.
வரிசை 60: வரிசை 61:


==சீதை வனம்புகல்==
==சீதை வனம்புகல்==
மக்களுக்குச் சீதையின் பாலுள்ள கருத்து, மாறுபட்ட நிலையிலிருந்தது காமத்தினை நயந்து செய்யும் இராவணனது இலங்கையில் சிறையிருந்த சீதையை அயோத்தி அரசியாக அமர்த்தியது சற்றும் பொருத்தமாக இல்லை என்று கூறலாயினர். இம் மொழிகளைக் கேட்ட இராமன், தன் மனைவியைக் காட்டிலும் நாட்டு மக்களை உயிராக உன்னும் தன்மையினன். மக்களுக்காகவே மன்னவன், என்ற மாண்புறு சிந்தையோடு வாழும் இயல்பினன். இராமன், சீதையின்பால் எல்லையற்ற பேரன்பைக் கொண்டவன் இராமன் என்பதைச் சித்திர கூட மலையில், இயற்கைக் காட்சியைக் காண்கின்றபோது அவற்றினைச் சீதையோடு ஒப்பிட்டுப் பார்த்து மனமகிழ்ந்தவன். அத்தகையோன் இச்சொற்களைக் கேட்டதும் இலக்குவனனிடம் சீதையைக் காட்டகத்தே விட்டு விட்டு வருமாறு ஆணையிட்டான். உயிரினும் இனிய மனைவியை விட நாட்டு மக்களின் கருத்தையே உயரியதாகக் கொண்ட இராமனது, சிறப்பு மிகு கொள்கையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுதான். உத்தரகாண்டத்தின் தனித்தன்மையாகும் என்பது ஒரு கருத்து. ஆனால் நவீன காலவிமர்சகர்கள் இச்செயலை ஏற்பதில்லை. பெண்னடிமைதனத்தின் தீவிரமான வடிவத்தை இந்த செயல்காட்டுவதாக விமர்சனம் உள்ளது.
மக்களுக்குச் சீதையின் பாலுள்ள கருத்து, மாறுபட்ட நிலையிலிருந்தது காமத்தினை நயந்து செய்யும் இராவணனது இலங்கையில் சிறையிருந்த சீதையை அயோத்தி அரசியாக அமர்த்தியது சற்றும் பொருத்தமாக இல்லை என்று கூறலாயினர். இம் மொழிகளைக் கேட்ட இராமன், தன் மனைவியைக் காட்டிலும் நாட்டு மக்களை உயிராக உன்னும் தன்மையினன். மக்களுக்காகவே மன்னவன், என்ற மாண்புறு சிந்தையோடு வாழும் இயல்பினன். இராமன், சீதையின்பால் எல்லையற்ற பேரன்பைக் கொண்டவன் இராமன் என்பதைச் சித்திர கூட மலையில், இயற்கைக் காட்சியைக் காண்கின்றபோது அவற்றினைச் சீதையோடு ஒப்பிட்டுப் பார்த்து மனமகிழ்ந்தவன். அத்தகையோன் இச்சொற்களைக் கேட்டதும் இலக்குவனனிடம் சீதையைக் காட்டகத்தே விட்டு விட்டு வருமாறு ஆணையிட்டான். உயிரினும் இனிய மனைவியை விட நாட்டு மக்களின் கருத்தையே உயரியதாகக் கொண்ட இராமனது, சிறப்பு மிகு கொள்கையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுதான். உத்தரகாண்டத்தின் தனித்தன்மையாகும் என்பது ஒரு கருத்து. ஆனால் நவீன காலவிமர்சகர்கள் இச்செயலை ஏற்பதில்லை. பெண்னடிமைதனத்தின் தீவிரமான வடிவத்தை இந்த செயல்காட்டுவதாக விமர்சனம் உள்ளது. இலக்குவணன் சீதையை வனத்தில் விட்ட பின்பு இராமன் இட்ட கட்டளையை வெளிப்படுத்தியவுடன் சீதை மீளாத் துயரங்கொண்டாள்.


கம்பராமாயணத்தில் அமைந்துள்ள ஆறுகாண்டங்களைவிட உத்தரகாண்டம் வேறுபட்ட, தனித்தன்மையுடையது. உத்தர காண்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஆறு காண்டங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரமூட்டுவனவாகவும் பெருமை சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உலகியல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒட்டக்கூத்தர் சுட்டியுள்ளார். இந்நூலில் வருகின்ற செய்யுட்கள் இனிய இழுமென் ஓசையோடு இலங்கும். நன்னடை, உவமை, உருவகங்கள், தற்குறிப்பேற்றம், பிற அணிகள் ஆகியன நன்கமைந்துள்ளன. இதன் கண் அமைந்துள்ள செய்யுட்கள் பாவினத்தைச் சார்ந்தவையாகும்.
இலக்குவணன் சீதையை வனத்தில் விட்ட பின்பு இராமன் இட்ட கட்டளையை வெளிப்படுத்தியவுடன் சீதை மீளாத் துயரங்கொண்டாள்.


==மேற்கோள்கள்==
:விழுந்தனள் புரளும் அந்த வெந்துயர் பொறுக்க மாட்டாது
<references/>
:எழுந்தனள் இரிய வீழும் இருகையால் வயிற்றை எற்றும்
:அழுந்திடும் துயர வெள்ளத்து அனையவள் ஆவி காணாக்
:கழிந்தனள் சீதை என்று கலங்கினர் கடவு ளோர்கள் (உத்.பா.753)


என்று கூறிய நிலையில்

:வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்
:இந்த இப்பிறவி விக்கிரு மாதரைச்
:சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
:தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் (இரா.சூளாமணி.34)

என்று முன் அனுமனிடம் கூறியதை, இங்கு விதியினிடம் கூறினாள். இராமனடைய காதல் மிகுதியைப் புலப்படுத்தி அத்தகைய காதல் உள்ளத்தையும் கலக்கி என்னைக் காட்டில் விடச் செய்த விதியே! இனி என்ன என்ன செய்வாயோ?

:ஏதமுறு பழியைச் சுமத்தி இப்பிறப் பில்உனை யொழிய
:மாதரை என்மனத் தாலும் தொடேன்என் றுவரம் தந்த
:காதலனை மனம்க லக்கிக் காட்டில் எனைவிடு வித்து
:வேதனை நோய்மிகத் தந்த விதியே யோவிதி யேயோ (உத்த.பா.777)

மேலும்

:தக்க கணவன் சீறித் தன்னைக் கைவிட்டு அகன்றால்
:புக்ககத் தார்கை விடுவர் பிறந்தகத் தார்போற் றார்கள்
:அக்கண மேபழி இடுவர் அன்னியர் கள்அரு வினையேன்
:மிக்க ஓரிடம் காண்கி லேன்விதி யேயோ விதியேயோ (உத்த.பா.780)

என்று கூறி அழுகிறாள்.

கணவனால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணைப் புக்ககத்தாரும் பிறந்தகத்தாரும் அயலகத்தாரும் புறக்கணித்து விடுவர். ஆதலின் இம்மூன்றகங்களிலும் வேறாய் மிக்கிருக்கும் ஓரகம் இல்லை யாதலின் மிக்கோரிடம் காண்கிலேன் என்றாள். ஈண்டு மனைவியின் பொதுவான இழிநிலையைக் கூறித் தன்னிலையைச் சீதை, புலப்படுத்தியதோடு அருவினை என்றது யாராலும் நீக்குதற்கு அரிய வினை, தான் செய்த தீவினையோ என்கிறாள்.

==விதவை இடும்பை==
இராவணனின் சிற்றன்னை கும்பி நசி என்பவனை மது என்றும் அரக்கன் கவர்ந்து சென்றான் என்ற செய்தியை வீடணனன் மூலம் அறிந்த இராவணன் நாற் படைபலத்தோடு அவனை நோக்கிச் சென்றான். அது போழ்து கும்பி நசி இராவணனை வணங்கி மதுவை ஒன்றும் செய்யாதே. அவன் என்னை இராக்கத மண முறையில் மணந்து கொண்டான். ஆதலால் அவனைக் கொல்லாதே என்று இராவணன் திருவடியில் வீழ்ந்து அழுதுகொண்டே சொல்கின்றாள்.

:மக்கள் இழந்த இடும்பையினும் மனையாள் இழந்த இடும்பை
:யினும் மிக்க இடும்பை வேல்வேந்தே! விதவை இடும்பை
:யென விளம்பத் தக்கது. அதனால் என் கழுத்தில் தாலி நீ
:தந்தருள்

என்று வேண்டுகின்றாள்.

இச்செய்யுளின் கருத்தாழத்தை உணர்ந்த அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரப் பதிகத்தில் “ஆரஞர்“ உற்ற வீரபத்தினி என்ற அடியின் உரையில் “ஆரஞர்=பெரிய வருத்தம் ஆவது கணவனை இழத்தல்“ என்று விளக்கம் கூறிவிட்டு

:மக்கள் இழந்த இடும்பை யினும் ம னையாள் இழந்த
:இடும்பை யினும் மிக்க இடும்பை வேல்வேந்தே விதவை இடும்பை
:யென விளம்பித் தக்கவதனால், என்கழுத்தில் தாலி நீதந்தருள்
:என்று தொக்க மணி நீண் முடியானைத் தொழுது பின்னுமிவை
:சொல்லும் (உத்த.திக்கு.பா.137)

என்றார். அடியார்க்கு நல்லார் காலத்திலேயே இந்நூல் சிறப்புற்றிருந்த தென்பதை யறியலாம்.

==மணமகன் தேர்வு==
மயன் தன் மகளாகிய மண்டோதரிக்கு ஏற்ற மணமகன் தேர்வு செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தோடு வருகையில் அவ்வெண்ணத்தின் வெள்ப்பாட்டைச் சமுதாய வெளிப்பாடாக ஒட்டக் கூத்தர் கூறும் நிலையில் நோக்கல்.
:“பண்புடைய குடிப்பிறப்பும் பழிப்பில்லாப் பேரழகும் பரந்த கேள்வி நுண்பொருளும் நீரொழியப் பால்நுகரும் அன்னம்போல் நோக்கித் தேரும்
:ஒண்பொருளும் இந்நான்கும் உடையாரைக் கிடையாத இவ்வுலகம் தன்னில்
:பெண்பெறுகை தனைப்போலப் பெரியதுயர் தானுண்டோ பேசும் காலே (உத்.60)

என்கிறார், மேலும்,

:இந்நான்கும் உடையாரைத் கிடையாதிவ் வுலகம் தன்னில்
:பெண்பெறுகை தன்னைப்போலப் பெரியதுயர் தானுண்டோ பேசுக்காலே (உத்.60)

என்று உள்ள வேதனையோடு கூறியிருப்பது. இக்காலத்தவர்க்குப் பொருந்திய சொல்லாகக் காணப்படுகிறது. ஒரு பெண்ணைப் பெற்றவளே இவ்வாறு சொல்லுவானாயின் பல பெண்களைப் பெற்றவர்களின் நிலை என்னாகும். அவர்கள் துன்பியல் சொல்லில் அடங்குமோ.

பெண்ணை மணப்பதற்கு நற்குடியில் பிறந்திருத்தல் வேண்டும். ஆனால், மண மகனின் கல்வி, செல்வம், அழகு, இளமை ஆகியனவற்றைப் பற்றிக் குலத்தோர் நினையார். அவர்கள் நோக்கமெல்லாம் மணமகன் நல்ல குடிப்பிறப்பு உள்ளவனாக இருத்தல் வேண்டும் என்பதேயாகும். பெண்ணின் தந்தையோ தன் பெண்ணை மணக்க வருகின்றவர் கல்வியாற்றல் மிகக்வராக இருத்தல் வேண்டும். அஃதே அவர்தம் குறிக்கோளாகும். மணமகனின் செல்வம், இளமை ஆகியவற்றைப் பற்றி எண்ணார். பெண்ணைப் பெற்றத் தாயோ தன் பெண்ணிற்குக் கொழு நனாக வருபவன் செல்வமிக்கவனாக இருத்தல் வேண்டும் என்று விரும்புவாள். அஃதே அவர்தம் குறிக்கோளாம். மணமகனின் குலம், கல்வி, அழகு ஆகியனவற்றை உன்னார். ஆனால், மணமகளோ தனக்குக் கணவனாக வருபவன் இளமையும் அழகும் உடையவராக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இருப்பாள். ஆனால் குலம், கல்வி, செல்வம் ஆகியனவற்றைப் பற்றிப் பெரிதும் சிந்திக்க மாட்டாள்.
மணமகனைத் தேர்ந்தெடுப்பதில் குலத்தோர், தந்தை, தாய், கன்னிப்பெண் ஆகியோரின் மன நிலையை நன்காராய்ந்து ஒருவருக்கொருவர் வேறுபட்ட கருத்தினராய் இருப்பர் என்பதைத் தெளிவாக இயம்பியுள்ளார் ஆசிரியர் ஒட்டக்கூத்தர்.
இக்கருத்தமைந்த பாடலைக் காணல்

:குலம்வேண்டு மென்றிருப்பர் குலத்துள்ளார் கல்வியினால் குறையா ஞானப்
:பலம்வேண்டும் என்றிருப்பர் தந்தைமார் பரந்தபெருஞ் செல்வ முள்ள
:நலம் வேண்டும் என்றிருப்பர் தாய்மார்கள் யவ்வனமும் அழகும் சார்ந்த
:நலம் வேண்டும் என்றிருப்பர் நாறுகுழல் கன்னிமார் நலத்தின் மிக்கார்
என்பர் இராவணன் பிறப்புப் படலம் செ.60
இழுமென் இசை
அசுவமேத யாகத்தைப் பெண்கள் காணச் செல்கையில் அவர்களுக்கேற்ப மெல்லோசையை மிக்கொலிக்குமாறு செய்யுள் செய்துள்ளார் ஒட்டக் கூத்தர்.
கஞ்சமலர் விஞ்சுகவின் அஞ்சிய முகத்தோர்
கொஞ்சுகிளி மென்சொலியர் கொங்கைகள் சுமந்தே
வஞ்சிபுரை நுண்ணிடை வருந்த வழிகாணா
மஞ்சர்கள் மனந்தொடர மங்கையர்கள் போனார் (உத்த.49)
என்பர்.
இச்செய்யுளில் கஞ்சமலர் விஞ்சுகவின் அஞ்சிய எனவும் கொஞ்சுகிளி மென்சொலியர் கொங்கைகள் சுமந்தே எனவும் வஞ்சிபுரை நுண்ணிடையர் வருந்த எனவும் மெல்லெழுத்துக்களே மிக்கு வருமாறு தொகுத்து அழகு செய்துள்ளமையைக் காணலாம்.
பொருண்மைக்கேற்ப மெல்லோசை விஞ்சப்பாடியுள்ளது போலவே பாடப்படும்பொருண்மையின் நடைக்கேற்பவும் செய்யுள் செய்கின்றார் ஒட்டக்கூத்தர். மேலும்,
:வண்ணமோ முகிலோ மையோ மரகத வடிவே வள்ளல்
:ஒண்ணிற மிவையொன் றாக உருக்கிய உருவோ என்பார்
:கண்ணினை செவ்வாய் பாதங் கைத்தலம் கமல மென்பார்
:புண்ணியஞ் செய்தார் இந்தப் புறக்கொடை தொழுவா ரென்பார் (உத்த.84)

இப்பாடலின் ஓசை நலம் இழுமென் ஓலைசலத்தோடு இலங்குகின்றது. ஒட்டக்கூத்தர் பாடல்களில் பல இந்நிலையிலுள்ளன.

நிறைவாக,

கம்பராமாயணத்தில் அமைந்துள்ள ஆறுகாண்டங்களைவிட உத்தரகாண்டம் வேறுபட்ட, தனித்தன்மையுடையது. உத்தர காண்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஆறு காண்டங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரமூட்டுவனவாகவும் பெருமை சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உலகியல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒட்டக்கூத்தர் சுட்டியுள்ளார். இந்நூலில் வருகின்ற செய்யுட்கள் இனிய இழுமென் ஓசையோடு இலங்கும். நன்னடை, உவமை, உருவகங்கள், தற்குறிப்பேற்றம், பிற அணிகள் ஆகியன நன்கமைந்துள்ளன. இதன் கண் அமைந்துள்ள செய்யுட்கள் பாவினத்தைச் சார்ந்தவையாகும்.


[[பகுப்பு:இராமாயணம்]]
[[பகுப்பு:இராமாயணம்]]

07:33, 23 மே 2017 இல் நிலவும் திருத்தம்

உத்தரகாண்டம் என்பது கம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது.[1]

கம்பர் தம் இராமாயணத்தைப் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன் வீடணன் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.

பரதனை யினைய கோவைச் சத்துருக் கனனைப் பண்டை விரதமா தவனைத் தாயர் மூவர் மிரிலைப் பொன்னை
வரதனை வலங்கொண் டேத்தி வணங்கினர் விடையுங் கொண்டெ
சரதமா நெறியும் வல்லோர் தத்தம் பதியைச் சார்ந்தார்

என்ற பாடல் மூலம் அறியலாம். அதன் பின்பு இராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி, இராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளுக்கு ஒட்டக் கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார்.

ஒட்டக்கூத்தர்

கலைமகளின் அருள் வாய்த்தமையால், அவர் உத்தரகாண்டத்தை இயற்றினார் என்று கூறுவர். இவருக்கு வாணிதாசன் என்ற பெயருண்டு. அது சோழ மண்டலச் சதுக்கத்தில் சொல்லப்படுகின்றது. இவர் இயற்றிய பாடல்களின் மாண்பைக் கண்டு சோழன் இவரைத் தம் அவைக் களப் புலவராக ஆக்கிக் கொண்டார். இவர் தக்கயாகப் பரணி, மூவருலா ஆகிய நூல்களை இயற்றினார். உத்தர காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டது.

சிலப்பதிகாரம், அறம்பொருள் இன்பம் என்னும் முப்பொருளைக் கூறுகின்றது. ஆனால், வீடுபேற்றினை கூறவில்லை என்பர். அக்குறையை நீக்க சீத்தலைச் சாத்தனார் வீட்டின் பத்தைக் கூற மணிமேகலையெனும் காப்பியத்தைப் படைத்து நிறைவு செய்தார். ஆதலால் இவ்விருநூல்களை இணைத்து இரட்டைக்காப்பியம் என்பர். கம்பர் ஆறுகாண்டத்தைப் படைத்தார். அதன் பின் நிகழும் நிகழ்வுகளை ஒட்டக் கூத்தர் பதினேழு படலங்களின் நிறைவு செய்துள்ளார். இவ்விரண்டும் இணைந்த நிலையில், இராமனின் மாண்புகள் நிறைவுறுகின்றன. ஒரு காப்பியத்தோடு இன்னொரு காப்பியம் ஒன்றி இணைந்த நிலையில் தண்டியாரின் காப்பிய இலக்கணம் நிறைவுறுகிறது. ஆதலால் இவ்விரு நூல்களை இரட்டை இராமாயணக் காப்பியங்கள் எனலாம்.

இராமனது ஆட்சியின் மாண்பு, காமவெறிகொண்ட இராவணனின் இழிதகச் செயல்கள், அதனால் அடைந்த வீழ்ச்சியைப் பற்றிக் கூறுவதோடு, எத்தகைய பேராற்றல் படைத்தவனாய் இருந்தாலும் காமச் சேற்றில் வீழ்வானாயின் அவன் வீழ்ச்சி வல்லே அமைந்து விடும்.

எனைத்துணை யர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல் (திருக்குறள்.பா.144)
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாம் இல்லிறப்பான் பண் (திருக்குறள் பா.146)
எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நற்கும் பழி (திருக்குறள்.பா.145)

மேற்கூறிய குறட்பாக்கள் இராவணனில் வாழ்வியலுக்குச் சான்றாகும்.

இராவணனின் இழிதகவு

வேதவதி, தந்தையின் விருப்பத்தோடு திருமாலையே தன் கணவனாக எண்ணி உள்ளத்தால் தொழுது வணங்கித் தவஞ் செய்கிறாள். அவள் பேரழகைக் கண்ணுற்ற இராவணன் காமுற்றான். வேதவதி தன் நிலையை எடுத்தியம்பியும் இராவணன் கேளாமல் தன்னாற்றலை எடுத்துக்கூறித் தன்னை மணக்குமாறு கூறி அவள் கரத்தைப் பற்றினான். வெகுண்டெழுந்த வேதவதி “என் சொல்லை மீறி என் கையைத் தீண்டினாய் இனி, உனக்கும் இலங்கைக்கும் உறவினர்க்கும் கேடு உண்டாகத் தோன்றுவேன்“ என்று கூறித் தீயில் மூழ்கினாள். அவளே பின் சீதையாகப் பிறந்து இராமனை மணந்து, காட்டகம் புகுந்து இலங்கையில் சிறையிலிருந்து இராவணனும் குலமும் இலங்கையும் அழிவதற்குக் காரணமாகிறாள்.

சிலகாலம் சென்ற பின்பு, இராவணன் அளகாபுரிக்கு அருகில் சேனையோடு தங்கியிருக்கையில், அரம்பை தன் கணவன் நளகூபரனை நோக்கி அழகியல் அழைப்போடு சென்றாள். அவளைக் கண்ணுற்ற இராவணன் யார் நீ‘ என்கின்றான். அவள் தன் பெயரையும் தன் கணவன் பெயரையும் சொல்கின்றபோது அவளை அணையப் புகுகின்றான். அது போழ்து “நெறியற்ற செயலைச் செய்யாதீர் என்று தொழுது குபேரன் மகனாகிய நளகூபரன், உறவு முறையால் நின்மைந்தனே, ஆதலால் நீர் எனக்குக் குரு“, என்கிறாள். அச் சொற்கேளாமல் அவளை வலியப் போகவிடத்தினைத் துய்க்கின்றான்.

அவனை வெறுத்து அவள், இனி இவ்வுலகில் மாதர்தம் சிந்தை உடன்பாடின்றி, எவரைத் தீண்டினாலும், அவர்தம் கற்புக் கனலால் வெந்து வீழ்வாய்,“ எனச் சபித்தாள். இந்நிலையைக் கணவன்பால் கூற அவன் வெகுண்டு, இனி இராவணன், “பிறன் மனைவியைத் தீண்டினால் அவன் பொன் முடிகளோடு தலையெல்லாம் பொடியாகி வீழ்க“, எனச் சபிக்கின்றார்.

வருணனோடு போர்புரிந்து வெற்றியுடன் இலங்கை நோக்கிச் செல்கையில், அந்தணர்-கன்னியர், அசுர மகளிர், கந்திருவப் பெண்டிர் முதலியோரைக் காண்கின்றான். அவர்களை அனைவரையும் தம்புட்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு இலங்கையை நோக்கிச் சென்றான். அதுபொழுது அவர்கள் நடுங்குகின்றனர். எங்கள் புதல்வியரை நடுங்கச் செய்தமையால் இராவணன் “இலங்கை நகர் பாழாக முடியுடனே தலையற்று வீழ்க“ என்று பெற்றோர்கள் சபிக்கின்றார்கள்.

இம்மூவகை நிகழ்வுகள் இராவணன் வீழ்ச்சிக்கு அடித்தளமாயமைகின்றன.

இராமன் பாராட்டல்

இராமன் சீதைபால் கொண்ட அன்பினைச் சித்திர கூட மலையில் உள்ள பல்வகையான இயற்கைக் காட்சிகளைச் சீதைக்குக் காட்டும்போது ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு வகையாகச் சீதையை விளித்துத் தன் அன்பைப் புலப்படுத்துகின்றான்.

“வாளும் வேலும் விட்டாயின அணையகண் மயிலே!”
குருதி வாளெனச் செவ்வரி பரந்த கட்குயிலே!
உவரிவாயன்றிப் பாற்கடல் உதவிய அமுதே!
ஆடுகின்ற மாமயிலினும் அழகிய குயிலே!
வில்லி வாங்கியசீலை யெனப்பொலி நுதல்விளக்கே!
ஒருவில் பெண்மையென் றுரைக்கின்ற வுடலினுக்குயிரே!
நிலைந்த போதினும் அமுதுஒக்கும் நேரிழை
மடந்தை மார்களில் திலகமே!
தெரிவை மார்க்கொரு கட்டளையெனச் செய்ததிருவே

எனப் பலப்பட, சீதையின் உறுப்புக்களையும் பண்பு நலன்களையும் கற்பின் மாண்பினையும் விளக்கமாகக் கூறி மகிழ்கின்றான்.

சீதையின் மாண்பு

அசோகவனத்தில் சீதை சிறையிருந்தாலும், மாசற்றவள் என்பதைத் தீப்புகுந்து காண்ட வேண்டும் என்று கூறியதும், அவ்வண்ணமே சீதை எரிபுகுந்து தூயவள் என்பதை நிலை நாட்டினாள். அதனால், இராமன், சீதையின் கற்பில் எள்ளளவும் ஐயமில்லாமல் சீதையை அரசியாகக் கொண்டு அயோத்தியை மாண்புற ஆட்சிபுரிகின்றான்.

சீதை வனம்புகல்

மக்களுக்குச் சீதையின் பாலுள்ள கருத்து, மாறுபட்ட நிலையிலிருந்தது காமத்தினை நயந்து செய்யும் இராவணனது இலங்கையில் சிறையிருந்த சீதையை அயோத்தி அரசியாக அமர்த்தியது சற்றும் பொருத்தமாக இல்லை என்று கூறலாயினர். இம் மொழிகளைக் கேட்ட இராமன், தன் மனைவியைக் காட்டிலும் நாட்டு மக்களை உயிராக உன்னும் தன்மையினன். மக்களுக்காகவே மன்னவன், என்ற மாண்புறு சிந்தையோடு வாழும் இயல்பினன். இராமன், சீதையின்பால் எல்லையற்ற பேரன்பைக் கொண்டவன் இராமன் என்பதைச் சித்திர கூட மலையில், இயற்கைக் காட்சியைக் காண்கின்றபோது அவற்றினைச் சீதையோடு ஒப்பிட்டுப் பார்த்து மனமகிழ்ந்தவன். அத்தகையோன் இச்சொற்களைக் கேட்டதும் இலக்குவனனிடம் சீதையைக் காட்டகத்தே விட்டு விட்டு வருமாறு ஆணையிட்டான். உயிரினும் இனிய மனைவியை விட நாட்டு மக்களின் கருத்தையே உயரியதாகக் கொண்ட இராமனது, சிறப்பு மிகு கொள்கையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுதான். உத்தரகாண்டத்தின் தனித்தன்மையாகும் என்பது ஒரு கருத்து. ஆனால் நவீன காலவிமர்சகர்கள் இச்செயலை ஏற்பதில்லை. பெண்னடிமைதனத்தின் தீவிரமான வடிவத்தை இந்த செயல்காட்டுவதாக விமர்சனம் உள்ளது. இலக்குவணன் சீதையை வனத்தில் விட்ட பின்பு இராமன் இட்ட கட்டளையை வெளிப்படுத்தியவுடன் சீதை மீளாத் துயரங்கொண்டாள்.

கம்பராமாயணத்தில் அமைந்துள்ள ஆறுகாண்டங்களைவிட உத்தரகாண்டம் வேறுபட்ட, தனித்தன்மையுடையது. உத்தர காண்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஆறு காண்டங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரமூட்டுவனவாகவும் பெருமை சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உலகியல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒட்டக்கூத்தர் சுட்டியுள்ளார். இந்நூலில் வருகின்ற செய்யுட்கள் இனிய இழுமென் ஓசையோடு இலங்கும். நன்னடை, உவமை, உருவகங்கள், தற்குறிப்பேற்றம், பிற அணிகள் ஆகியன நன்கமைந்துள்ளன. இதன் கண் அமைந்துள்ள செய்யுட்கள் பாவினத்தைச் சார்ந்தவையாகும்.

மேற்கோள்கள்

  1. இராமாயண உத்தரகாண்டம், பக்கம் 59