பனம்பாரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஐந்திரம்: I have taken the references from language researcher Mr. Devaneyan and Mr. Alex Collier
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50: வரிசை 50:
அதங்கோட்டாசானுக்கு எழுந்த ஐயங்கள் எழுத்து எழுத்துமுறை வைப்பில் எனப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். (அது வடமொழியை ஒப்புநோக்கி, எகர, ஒகர எழுத்துக்கள் பற்றியதாகவும், கசடதப வல்லினத்தில் வர்க்க எழுத்துக்கள் பற்றியதாகவும் இருந்திருக்கலாம்) தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் மயங்கா மரபில் தன் நூலில் காட்டப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்தினார்.
அதங்கோட்டாசானுக்கு எழுந்த ஐயங்கள் எழுத்து எழுத்துமுறை வைப்பில் எனப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். (அது வடமொழியை ஒப்புநோக்கி, எகர, ஒகர எழுத்துக்கள் பற்றியதாகவும், கசடதப வல்லினத்தில் வர்க்க எழுத்துக்கள் பற்றியதாகவும் இருந்திருக்கலாம்) தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் மயங்கா மரபில் தன் நூலில் காட்டப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்தினார்.
===ஐந்திரம்===
===ஐந்திரம்===
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] ஐந்திரம் என்பது தமிழர் பல ஆண்டுகள் ஆய்ந்து உணர்ந்த (நிலா, கோள், விண்மீன்,ஓகம் மற்றும் கரணங்கள்) ஆகிய ஐந்தின் திரன்பற்றிய நூட்களாகும், ஆனால் இதை ஐந்திரம் என்பது வடமொழி இலக்கண நூல் என்றும் அதனை மேற்கொள் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார் என்று தவராக கூறுவோரும் உண்டு. ஆனால் தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்திற்கு முந்தைய நூல் என்று வடமொழியில் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை, ஆம் இன்றைய மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி வட மொழி எனப்படும் சமசுகிருத மொழி ஏறத்தாழ கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட மொழி என்று நிறுவியும் பிற்காலத்தில் வடமொழியில் ஆக்கப்பட்ட அனைத்து நூல்களும் தமிழில் இருந்து தொகுக்கப்பட்டதே என்றும் நிறுவியுள்ளனர்.
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] என்னும் வடமொழி இலக்கண நூல் அறிந்தவர். அதிலிருந்து மேற்கோள்களைக் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார்.

===தொல்காப்பியன்===
===தொல்காப்பியன்===
தொல்காப்பியர் ஐந்திர நூலறிவு நிரம்பியவர் என்றாலும் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார்.
தொல்காப்பியர் ஐந்திர நூலறிவு நிரம்பியவர் என்றாலும் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார்.

18:07, 25 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பனம்பாரனார் தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் ஆவார். தொல்காப்பியருக்குச் சமகாலத்தவர். தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கர் என்றும் கூறப்படுகிறது. பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. [1] [2]

தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

பனம்பாரனார் சொல்லும் செய்திகள்

தமிழ்கூறு நல்லுலகம்

வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடப்பது.

தொல்காப்பியத்துக்கு முதல்

தமிழ் கூறு நல்லுலகத்தில் நிலவிவந்த வழக்கு மொழியும், செய்யுள் மொழியும்.

தொல்காப்பியர் ஆராய்ந்து பார்த்தது

  1. தமிழ் நூல்கள் பயன்படுத்திய எழுத்து
  2. பேச்சிலும் எழுதப்பட்ட நூலிலும் அமைந்திருந்த சொல்லமைதி
  3. பேச்சும் நூலும் உணர்த்திய பொருளமைதி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்

செந்தமிழ் இயல்பாகப் பேசப்படும் நிலத்துக்கு அண்மையதாய்ப் பொருந்தியிருக்கும் நிலத்தில் நிலவிவந்த தமிழும் தொல்காப்பியரால் ஆராயப்பட்டது.

முந்துநூல்

தொல்காப்பியருக்கு முன் தோன்றி நிலவிவந்த இலக்கண, இலக்கியங்கள். இவற்றைத் தொல்காப்பியர் கண்டறிந்தார். அவற்றை முறைப்படுத்தி எண்ணிப் பார்த்தார்.

புலம்

மொழிப்புலம். Field of the Language. தொல்காப்பியர் மொழிப்புலம் தொகுத்துத் தந்தார்.
  • போக்கு = மனம் போன போக்கு, குற்றம்
  • பனுவல் = (பன் = பஞ்சு, பனுவல் = பஞ்சை நூலாக்கி ஆடை நெய்வது) நூல் - இது எழுத்து என்னும் பஞ்சைச் சொல் என்னும் நூலாக்கிப், பொருள் என்னும் ஆடையாக்கிக் கொள்வது. நூல் - ஆகுபெயர்.
மனம் போன போக்கில் எழுதாமல், மொழியமைதியைத் தழுவியே பனுவல் செய்தார்.

அரங்கேற்றம்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் (தமிழ்ச்சங்கத்தில்) அரங்கேற்றப்பட்டது.

தமிழவைத் தலைமை

தொல்காப்பியர் தொல்காப்பியத்தை அரங்கேற்றியபோது அவைக்குத் தலைமை தாங்கியவர் அதங்கோட்டாசான் (அதங்கோட்டு ஆசான்). இவரது நாவில் அறநெறி கரைந்த சொல் வெளிப்படும். இவர் நான்மறை முற்றக் கற்றவர். அரங்கேற்றத்தின்போது இவர் சில அரில்களை(ஐயங்களை) எழுப்பினார். அவற்றைத் தொல்காப்பியர் போக்கினார். பின்னரே தொல்காப்பியம் அரங்கேறியது.

மயங்கா மரபின் எழுத்துமுறை

அதங்கோட்டாசானுக்கு எழுந்த ஐயங்கள் எழுத்து எழுத்துமுறை வைப்பில் எனப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். (அது வடமொழியை ஒப்புநோக்கி, எகர, ஒகர எழுத்துக்கள் பற்றியதாகவும், கசடதப வல்லினத்தில் வர்க்க எழுத்துக்கள் பற்றியதாகவும் இருந்திருக்கலாம்) தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் மயங்கா மரபில் தன் நூலில் காட்டப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்தினார்.

ஐந்திரம்

தொல்காப்பியர் ஐந்திரம் ஐந்திரம் என்பது தமிழர் பல ஆண்டுகள் ஆய்ந்து உணர்ந்த (நிலா, கோள், விண்மீன்,ஓகம் மற்றும் கரணங்கள்) ஆகிய ஐந்தின் திரன்பற்றிய நூட்களாகும், ஆனால் இதை ஐந்திரம் என்பது வடமொழி இலக்கண நூல் என்றும் அதனை மேற்கொள் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார் என்று தவராக கூறுவோரும் உண்டு. ஆனால் தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்திற்கு முந்தைய நூல் என்று வடமொழியில் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை, ஆம் இன்றைய மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி வட மொழி எனப்படும் சமசுகிருத மொழி ஏறத்தாழ கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட மொழி என்று நிறுவியும் பிற்காலத்தில் வடமொழியில் ஆக்கப்பட்ட அனைத்து நூல்களும் தமிழில் இருந்து தொகுக்கப்பட்டதே என்றும் நிறுவியுள்ளனர்.

தொல்காப்பியன்

தொல்காப்பியர் ஐந்திர நூலறிவு நிரம்பியவர் என்றாலும் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார்.

படிமையோன்

தொல்காப்பியர் தமிழின் பல்வகைப் புகழைத் தன் தொல்காப்பியத்தில் நிலைநிறுத்திக் காட்டியுள்ளார் என்று பனம்பாரனார் குறிப்பிடுகிறார். இவரது கூற்று தமிழின் புகழைப் படிமையாக்கிய படிமையோன் என்றும் பொருள்படுமாறு அமைந்துள்ளது. படிமையோன் என்பதற்குப் படிமையாகிய தவக்கோல்ம் பூண்டவர் என்றும் பொருள் காண்கின்றனர்.

குறுந்தொகைப் பாடல் ஆசிரியர்

குறுந்தொகை 52ஆம் பாடலைப் பாடியவர் ஒரு பனம்பாரனார். இவர் தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனாருக்குக் காலத்தால் பிற்பட்டவர்.

குறுந்தொகை 52 பாடல்

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைத் தலையையாய் நடுகல் கண்டே
நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறைஇறையானே.

பாடல் செய்தி

திருமணத்திற்கு நாள் குறித்தாயிற்று. தலைவியின் வாயில் வெண்பல் தெரிகிறது. நடுகல் கண்டு இறைவன் என்று வழிபட்டதன் பயன் இது என்கிறாள் தோழி.

  1. இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது
  2. "பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவிழக்கச் செய்கிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனம்பாரனார்&oldid=2094044" இலிருந்து மீள்விக்கப்பட்டது