கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
(edited with ProveIt) |
No edit summary |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
|birth_place = [[இணுவில்]], [[யாழ்ப்பாணம்]] |
|birth_place = [[இணுவில்]], [[யாழ்ப்பாணம்]] |
||
|death_date = {{Death date and age|2006|6|27|1930|3|21}} |
|death_date = {{Death date and age|2006|6|27|1930|3|21}} |
||
|death_place = |
|death_place = [[தமிழ்நாடு]] |
||
|death_cause = |
|death_cause = |
||
|nationality = [[இலங்கைத் தமிழர்]] |
|nationality = [[இலங்கைத் தமிழர்]] |
09:02, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பண்டிதர் கா. செ. நடராசா | |
---|---|
படிமம்:Nadarajah.jpg | |
பிறப்பு | இணுவில், யாழ்ப்பாணம் | 21 மார்ச்சு 1930
இறப்பு | சூன் 27, 2006 தமிழ்நாடு | (அகவை 76)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | இணுவையூர் செ. நடராசன் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கா. செல்லையா, சீனுக்குட்டி |
வாழ்க்கைத் துணை | பரமேசுவரி (தி. 1961) |
பண்டிதர் கா. செ. நடராசா இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.[1]
வாழ்க்கை வரலாறு
இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார் சுருட்டுக்கொட்டிலிலே இராமாயணம், மகாபாரதம், ஆகியவை பற்றிய அறிவைப் பூரணமாகப்பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றார்.
எழுதிய நூல்கள்
- தமிழா விழித்தெழு - 1958: டாக்டர். மு.வரதரஜனின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
- இளங்கோவின் கனவு - 1961: சுவாமி தனிநாயகம் அடிகளாரின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
- இணுவிற் கந்தசுவாமி கோயில் விடுதலை இயக்க வரலாறு
- தலவாக்கொல்லை திருமுருகன் ஊஞ்சல்
- இணுவை அப்பர் - 1977
- வள்ளுவரும் பிரபஞ்சமும் - 1990
- இந்து கலைக்களஞ்சியக் கட்டுரைகள் - பாகம் இரண்டு, பாகம் மூன்று - 1991 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.
- தெட்சணகைலாயபுராணம் பாகம் ஒன்று, பாகம் இரண்டு ஆகியவற்றிற்கு உரை - 1992 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.
மேற்கோள்கள்
- ↑ "இணுவை அப்பர்". pp. பக். 77. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015.