காமதேனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://ammandharsanam.com/magazine/March2009unicode/24page.html சிங்கிக் குளம் திருக்கோவில்!] |
* [http://ammandharsanam.com/magazine/March2009unicode/24page.html சிங்கிக் குளம் திருக்கோவில்!] |
||
* [http://www.amanushyam.in/2012/08/blog-post_4360.html காமதேனு வணங்கிய தலம்] |
|||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
17:09, 24 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
காமதேனு தெய்வலோகத்தில் வசிக்கும் பசுவாக இந்துகளால் நம்பிக்கை கொள்ளப்படுகிறது. இந்த காமதேனு வடிவத்தின் வழிபாடே பசு வழிபாடாக மாறியதாக நம்பப்படுகிறது.
தோற்றம்
அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின. கற்பக விருட்சம் போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது. காமதேனு பெண்ணின் தலையும், மார்பும், பசுவின் உடலும்ஸ மயில்தோகையும் இணைந்து தோற்றமளிக்கிறது. இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றார்கள். இதற்காக விஷ்வாமித்திர மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.
காமதேனுவுக்காக சண்டை
காதி என்ற மன்னரின் புதல்வர் விஸ்வாமித்ரர் பெரும் மன்னர். ஒருநாள் பிரம்மரிஷி வஸிஷ்டர் ஆசிரமத்திற்கு பெரும் படையுடன் வந்தார். மன்னரை மகிழ்விக்க வஸிஷ்டர் தேவலோக பசுவான காமதேனுவின் துனையால் வந்தோர் அனைவருக்கும் அறுசுவை உணவிட்டார். உண்டு மகிழந்த மன்னர் விஸ்வாமித்தரருக்கு காமதேனுவின் மகிமை புரிந்தது. அதனை தன்னுடன் கொண்டு செல்ல எத்தனித்தார். அப்போது வசிஸ்ஷடர் உத்தரவினை ஏற்று ஏராளமான படைகளை உருவாக்கி காமதேனு மன்னர் படையை எதிர்த்தது. மன்னர்களால் பெரும் உயர்வினை அடைய இயலாது என்று உணர்ந்து தன் மன்னர் பட்டத்தினை துறந்து துறவியானார் என்று கதை உள்ளது.[1]
சுவாமி வாகனம்
சிவன், முருகன், விநாயகன், பெருமாள் ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது. இறைவன் வீதி உலா வருகையில் காமதேனுவின் வாகனங்களில் காட்சி தருகிறார். பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும், தங்கம் வெள்ளியில் செய்த வாகனங்கள் சில கோவில்கள் உள்ளன. [2]