சால்வதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சால்வதேசம் ஆபீரதேசத்தின் வடக்கிலும், விராடதேசம், சூரசேனதேசங்களுக்கு மேற்கிலும், சதத்ருநதியின் தென்பாக பூமியில் அகன்று பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசம் மிகவும் சின்ன தேசமாகும். விவசாயத்திற்கு ஏற்ற பூமியாய் இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்திற்கு மலைத்தொடர், காடுகளும், அவைகளில் கொடிய விலங்குகள் என்பதே கிடையாது.

நதிகள்[தொகு]

விபாசாநதியும், சதத்ருநதியும், மத்சுயதேசத்தைக் கடந்து ஒரு பெரிய நதியாக மாறி இந்த தேசத்தை செழிக்க வைத்து மேற்கு எல்லையில் ஓடும் சிந்துநதியுடன் இணைகிறது.

விளைபொருள்[தொகு]

இந்த தேசத்தில் பட்டு, கரும்பு, பருத்தி, திராட்சை, முதலியன அதிகமாய் விளைந்தும், இந்த தேசத்தவர்கள் மகாராட்டிரம், ஆந்திரம், யவனதேசம், வங்கம், கோசலம், குருதேசம், சூரசேனம் அகிய தேசங்களில் ரத்தினம், பட்டு முதலியனவையும் வியாபாரம் செய்கின்றனர்.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் -168 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்வதேசம்&oldid=2076839" இலிருந்து மீள்விக்கப்பட்டது