கொழும்பு பன்னாட்டு புத்தகக் காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழும்பு பன்னாட்டு புத்தகக் காட்சி
Colombo International Book Fair
18 ஆவது கொழும்பு பன்னாட்டு புத்தகக் காட்சி -2016
நிகழ்நிலைசெயல்பாட்டில் உள்ளது
நிகழிடம்பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
அமைவிடம்கொழும்பு, இலங்கை
நாடுஇலங்கை
முதல் நிகழ்வு1999

கொழும்பு பன்னாட்டு புத்தகக் காட்சி (Colombo International Book Fair) இலங்கையின் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா நினைவு பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறுகிறது.[1] இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்து நடத்துகிறது. [2]

கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின் 22 ஆவது பதிப்பு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று தொடங்கி செப்டம்பர் 27 வரை நடத்த திட்டமிடப்பட்டது.[3] ஏற்பாட்டாளர்கள் சிறப்பு கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர். கொழும்பு பன்னாட்டு புத்தகக் காட்சி என்பது இலங்கையின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Print is still king". The Sunday Times. September 25, 2016. http://www.sundaytimes.lk/160925/plus/print-is-still-king-209388.html. 
  2. "Colombo International Book fair 2014 from 10 – 17 September @ BMICH". Student Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.
  3. "சுகாதார வழிமுறைகள் குறித்த கடும் எச்சரிக்கைகளுடன் ஆரம்பமானது 22 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி". Virakesari.lk. பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
  4. "CIBF". August 13, 2020 இம் மூலத்தில் இருந்து ஜூலை 25, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210725150842/https://www.lankaeducation.com/colombo-international-book-fair-2020-begins-september-18-to-27-at-bmich/. 

புற இணைப்புகள்[தொகு]