கே. இராகோத்தமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. இராகோத்தமன், முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரணை செய்த சிபிஐ புலனாய்வு அதிகாரி ஆவார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளூந்தூர்பேட்டை வட்டத்தில் பிறந்த இராகோத்தமன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் பட்டமேற்படிப்பை முடித்து, 1968-ஆம் ஆண்டில் சிபிஐயில் உதவி ஆய்வாளாராக பணியில் சேர்ந்தார்.

இராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த, கார்த்திகேயன் ஐ பி எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு புலானாய்வுக் குழுவில், தலைமைப் புலனாய்வு அதிகாரியாக கே. இராகோத்தமன் செயல்பட்டார்.

படைப்புகள்[தொகு]

36 ஆண்டுகள் பணியாற்றி, 2006-ஆம் ஆண்டில் கண்காணிப்பாளராக பணி ஓய்வு பெற்ற கே. இராகோத்தமன் இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக Human bomb (மனித வெடிகுண்டு) எனும் ஆவணபடத்தை தயாரித்தார்.[1] மேலும் Conspiracy to Kill Rajiv Gandhi from CBI Files, Third Degree Crime Investigation Management : Crime and the Criminal, Assassination of Mahatma – Indira – Rajiv Gandhis மற்றும் Rarest of rare case - Murder of an advocate எனும் நான்கு ஆங்கில நூல்களையும், இராஜீவ் கொலை வழக்கு எனும் தமிழ் நூலையும் எழுதியுள்ளார்.[2] [3]

மறைவு[தொகு]

கே. இராகோத்தமன் தமது 76 வது அகவையில் கோவிட் பெருந்தொற்றால் 13 மே 2021 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராகோத்தமன்&oldid=3515288" இலிருந்து மீள்விக்கப்பட்டது