கிடாரி சர்வேசுவர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிடாரி சர்வேசுவர ராவ்
Kidari Sarveswara Rao
இறப்பு(2018-09-23)23 செப்டம்பர் 2018
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்கிடாரி சிரவன் குமார் (மகன்)

கிடாரி சர்வேசுவர ராவ் (Kidari Sarveswara Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முதலில் இவர் ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சி கட்சியையும் பின்னர் தெலுங்கு தேச கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று அரக்கு பள்ளத்தாக்கில் மாவோயிசுட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3] கிடாரியின் மரணத்திற்குப் பிறகு, இவரது மகன் கிடாரி சிரவன் குமார் பொதுத் தேர்தலில் பங்கேற்காமல் மாநில பழங்குடியினர் நல அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாரி_சர்வேசுவர_ராவ்&oldid=3820652" இலிருந்து மீள்விக்கப்பட்டது