மணியம் (ஓவியர்)
(ஓவியர் மணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
மணியம் என்ற புனைபெயரில் புகழ்பெற்ற டி. யூ. சுப்பிரமணியம் (பிறப்பு: சனவரி 26, 1924 - 1968[1]) ஓர் சிறந்த கதை விளக்கும் ஓவியராக விளங்கினார். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய வரலாற்றுப் புதினங்களுக்கு அதன் கதாபாத்திரங்கள் வாசகர்களின் மனதில் நிலைக்குமாறு இதழோவியம் வரைந்து புகழ்பெற்றார்.
’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களையும், புத்தகத்தை படித்துவிட்டு திருப்பித் தர வாடகைக்குக் கொடுப்பவர்களுக்கும் நகைச்சுவையாக அறிவுறுத்தும் பெருமை பெற்றவை இவரது ஓவியங்கள்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ முகநூலில் ஓர் குறிப்பு
- ↑ http://www.thehindu.com/features/friday-review/art/art-spanning-three-generations/article63013.ece
வெளியிணைப்புகள்[தொகு]
ஓவியர் மணியம் - (ஆங்கில மொழியில்)