எலியாசு தியாசு பெனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலியாசு தியாசு பெனா
Elías Díaz Peña
தேசியம்பராகுவேயர்
அமைப்பு(கள்)சோப்ரெவிவென்சியா
அறியப்படுவதுசுற்றுச்சூழல் பாதுகாப்பு
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2000)

எலியாசு தியாசு பெனா (Elías Díaz Peña) பராகுவே நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார். பரானே நதி மற்றும் பராகுவே நதியின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்காக ஆசுகார் ரிவாசுடன் இணைந்து கூட்டாக 2000 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது. [1]

இரண்டு ஏற்றுமதி உந்துதல் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக தென் தென் அமெரிக்காவின் ரியோ டி லா பிளாட்டா ஆற்றுப் பள்ளத்தாக்கின் இரண்டு முக்கிய நீர்வழிகளான பரானே மற்றும் பராகுவே நதிகளின் நீர்வழிகள் மோசமான மாசுபாடுகளுக்கு உட்படும் அச்சுறுத்தலில் இருந்தன.  

இந்த நீர்வழிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தால் வாழ்ந்து வந்த மக்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆதரவாக ஆசுகார் ரிவாசு மற்றும் எலியாசு தியாசு பெனா ஆகியோர் தங்கள் அமைப்பான சோப்ரெவிவென்சியாவை 1986 ஆம் ஆண்டில் தொடங்கி பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மூலம் ஏழை, பழங்குடி மற்றும் ஓரங்கட்டப்பட்ட நகர்ப்புற பராகுவேயர்களுக்கு வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுக்க சோப்ரிவிவென்சியா அமைப்பு இறங்கியது.  

மேற்கோள்கள்[தொகு]

  1. "South & Central America 2000. Elias Diaz Peña & Oscar Rivas. Paraguay. Rivers & Dams". Goldman Environmental Prize. Archived from the original on 5 May 2011. பார்க்கப்பட்ட நாள் 8 January 2011.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியாசு_தியாசு_பெனா&oldid=3185565" இலிருந்து மீள்விக்கப்பட்டது