எர்ரா மாட்டி திபாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்ரா மாட்டி திபாலு
புவியியல்
அமைவிடம்விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா

எர்ரா மாட்டி திபாலு (Erra Matti Dibbalu) என்றும் செம்மணல் மலை என்றும் அழைக்கப்படுவது தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம் ஆகும்.[1][2][3] இது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரின் புறநகரில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள பல பாரம்பரிய தளங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]

பற்றி[தொகு]

இந்த எர்ரா மாட்டி திபாலு என்பதுவிசாகப்பட்டினத்தின் இயற்கை சொத்து ஆகும். இது 12000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இடமாகும். சுமார் 40 அடி உயரச் சிவப்பு மணல் மேடுகள் பல காணப்படுகின்றன.[5] இந்த தளங்களைப் புவி-பாரம்பரிய தள நிலையை அடைய இந்திய புவியியல் ஆய்வு மையம் உதவியது.[6] 2014ஆம் ஆண்டு தேசிய புவி பாரம்பரிய இடமாகவும் 2016ஆம் ஆண்டு மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இப்பகுதி ஆனது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Geological Monument, from Geological Survey of India website". Archived from the original on 12 July 2017. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.
  2. Geo-Heritage Sites, Minister of Mines Press release, 09-March-2016
  3. national geo-heritage of India பரணிடப்பட்டது 2017-01-11 at the வந்தவழி இயந்திரம், INTACH
  4. "about erra matti dibbalu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
  5. https://www.thehindu.com/life-and-style/travel/visakhapatnams-hidden-ecological-hotspots/article29519572.ece
  6. "status". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ரா_மாட்டி_திபாலு&oldid=3236394" இலிருந்து மீள்விக்கப்பட்டது