எக்மோ


எக்மோ அல்லது பிரித்தேற்ற சவ்வு ஆக்சிஜனேற்றம் (Extracorporeal membrane oxygenation|ECMO) எனப்படுவது நவீன கருவியின் மூலம் அதி உயர் சிகிச்சை அளிப்பதாகும். தீவிர மூச்சுத் தினறல் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாதபோது, எக்மோ கருவியின் உதவி மூலம் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, பிராணவாயு நுரையீரலுக்கு அனுப்பப்படும். இதனால் மூச்சு விடுதல் மற்றும் இரத்த ஓட்டம் தடை படுவது நிறுத்தப்பட்டு நோயாளி விரைவில் காப்பாற்றப்படுவார்.[1] [2]