உலர் சீயநெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திரெலான் உலர்சீய நெய் 1940 களில் இருந்து பயனில் உள்ளது.

உலர் சீயநெய் (Dry shampoo) என்பது தலைமுடியைத் தூய்மை செய்ய உதவும் ஒருவகை சீயநெய் ஆகும். பொடி வடிவில் இருக்கும் நீர் தேவைப்படாத இது தலைமுடியின் பிசுபிசுப்புத் தன்மையை குறைக்கிறது. தூவாணத் தகரக் கலனில் அடைக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் 17% பெண்கள் உலர் சீயநெய்யைப் பயன்படுத்துவதாகக் கணித்துள்ளனர்.[1] உலர் சீயநெய் சோள மாவு அல்லது அரிசி மாவு அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கபடுகிறது.[2] [3]

கிம்பா பெண்கள் செங்களிமண்ணை உலர்சீயமாகப் பயன்படுத்தல்.

சில சான்றுகளின்படி 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியாவில் மக்கள் களிமண் பொடியை தங்களின் தலைமுடிக்கு பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. பொய்முடியின் (wigs) நாற்றத்தை மாற்றவும் அதன் வண்ணத்தை மாற்றியமைக்கவும் மாவுப்பொருட்களோடு உலர் சீயநெய்யும் பயன்படுத்தும் வழக்கம் அமெரிக்காவில் 1700 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dry shampoos accounted for 3% of global shampoo launch activity in 2012 | Mintel.com". பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  2. "Sales of dry shampoo are rocketing - but which should YOU buy?". பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  3. "How Dry Shampoo Works - HowStuffWorks". பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  4. "Dry Shampoo". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்_சீயநெய்&oldid=3725551" இலிருந்து மீள்விக்கப்பட்டது