ஈரோடு மகிமாலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரோடு மகிமாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் அமைந்துள்ளது. இரு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் இவ்வூர் ஈரோடை என்றழைக்கப்பட்டு, பின்னர் ஈரோடு என்றானது. இவ்வூர் முன்னர் மகிமாலீசுவரம் என்றழைக்கப்பட்டது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக மகிமாலீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி மங்களாம்பிகை ஆவார். சித்திரை சதய நட்சத்திரத்தில் தேர்த் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]

அமைப்பு[தொகு]

இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல் கீழே விழாத வகையில் உள்ளது. 63 நாயன்மார்கள் சிலைகளும் 16 வகை லிங்கத் திருமேனிகளும் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]