உள்ளடக்கத்துக்குச் செல்

இ. சுந்தரமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. சுந்தரமூர்த்தி
7-ஆம் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பதவியில்
19 திசம்பர் 2001 - 18 திசம்பர் 2004
முன்னையவர்கதிர் மகாதேவன்
பின்னவர்சி. சுப்பிரமணியம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-02-05)5 பெப்ரவரி 1942
வெள்ளலூர், கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்புமே 13, 2026(2026-05-13) (அகவை 84)
சென்னை, தமிழ்நாடு
பணியிடம்சென்னைப் பல்கலைக்கழகம் (? -2001)

பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (5 பிப்ரவரி 1942 – 13 மே 2026) தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார்.

பிறப்பு

[தொகு]

இ. சுந்தரமூர்த்தி கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூரில் இளையபெருமாள், பழனியம்மாள் ஆகியோருக்கு 1942 பிப்பிரவரி 5 அன்று பிறந்தார்.[1]

பணி

[தொகு]

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில் தலைவர், பதிப்புத்துறைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2001 திசம்பர் 19 முதல் 2004 திசம்பர் 18 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். செம்மொழி நிறுவனத்தில் 2008 முதல் 2014 வரை முதுநிலை ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். இந்நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். [1] [2]

நூல்கள், கட்டுரைகள்

[தொகு]

சுவடியியல், பதிப்பியல், இலக்கணம், நடையியல் எனப் பல துறைகளில் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். [1] 260 கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழக அரசின் திருக்குறள் விருது[சான்று தேவை] உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். [3]

பயணங்கள்

[தொகு]

தமிழாய்வுப் பணிகளுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._சுந்தரமூர்த்தி&oldid=4536441" இலிருந்து மீள்விக்கப்பட்டது