இலெமூர் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலெமூர் கடற்கரை (Lemur Beach) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாகர்கோவில் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.[1][2] நீலக்கடலும் நீண்ட மணல் பரப்பைக் கொண்ட கடற்கரையும் இக்கடற்கரையின் சிறப்புகளாகும். கடற்கரை மணல் பரப்பு சுத்தமாக இருப்பது மேலும் கூடுதல் சிறப்பாகும். குட்டி மாலத்தீவு, ஆயிரம் கால் பொழிமுகம் என்ற பெயர்களாலும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடலில் கலக்கும் கடற்கரைகளில் லெமூர் கடற்கரையும் ஒன்றாகும்.

போக்குவரத்து[தொகு]

நாகர்கோவிலில் இருந்து ராசாக்கமங்கலம் வழியாக குளச்சல் செல்லும் சாலையில் கணபதிபுரம் பகுதியில் இக்கடற்கரை அமைந்துள்ளது. நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல், மண்டைக்காடு வழித்தடங்களில் செல்கின்ற அரசுப் பேருந்துகளில் ஏறி கணபதிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து வாடகை வாகனங்களில் இலெமூர் கடற்கரைக்குச் செல்லலாம்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் மாலை 8 மணி வரையில் கடற்கரையை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் 24 மணி நேரமும் இங்கு செல்லலாம். பக்கத்துல தங்கும் விடுதிகள் எதுவும் இல்லை. இங்கு குளிப்பதற்கும் மது அருந்தவும் அனுமதி இல்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கன்னியாகுமரி: வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் அறிந்திராத பிரமிப்பூட்டும் சுற்றுலா தலங்கள்". BBC News தமிழ். 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
  2. "Google Travel". www.google.com.my. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
  3. "கன்னியாகுமரியில் ஒரு 'குட்டி மாலத்தீவு'.. கோடை விடுமுறையை கழிக்க அட்டகாசமான ஸ்பாட்!". News18 Tamil. 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெமூர்_கடற்கரை&oldid=3734546" இலிருந்து மீள்விக்கப்பட்டது