இலட்சுமி மஜூம்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமி மஜூமதார்
இந்திய சாரணர் சங்கம்-ஆணையர்
பதவியில்
1964–1983
முன்னையவர்கிருயானத் குன்சூரு
பின்னவர்இலட்சுமன் சிங்

இலட்சுமி மஜூம்தார் (Lakshmi Mazumdar) என்பவர் தில்லியைச் சேர்ந்த சாரணியர் ஆவார். இவர் நவம்பர் 1964 முதல் ஏப்ரல் 1983 வரை இந்தியச் சாரணர் சங்கத்தின் வழிகாட்டிகளின் தேசிய ஆணையராக இருந்தார். மேலும் சங்க உலக பெண் வழிகாட்டி/பெண் சாரணர் மையத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டவர் ஆவார். இது 16 அக்டோபர் 1966 அன்று உலகத் தலைவர் வழிகாட்டி, திருமதி ஓலவ் பேடன்-பவல் திறக்கப்பட்டது. .

மஜும்தார் 1922-இல் மிக இளம் வயதிலேயே சாரணிய அமைப்பில் சேர்ந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவர் அதிக பொறுப்புகளை வகித்தார். 1969-ஆம் ஆண்டு மஜும்தாருக்கு வெண்கல ஓநாய் விருது வழங்கப்பட்டது. இது உலக சாரணர் இயக்கத்தின் உலக அமைப்பின் தனிச்சிறப்பு ஆகும். இது உலக சாரணர் குழுவினால் உலக சாரணர்களுக்கான சிறப்பான சேவைகளுக்காக வழங்கப்படும் விருதாகும்.[1]

மஜும்தருக்கு இந்திய அரசு 1965-இல் பத்மசிறீ விருதினை வழங்கிச் சிறப்பித்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of recipients of the Bronze Wolf Award". scout.org. WOSM. பார்க்கப்பட்ட நாள் 2019-05-01.
  2. "Padma Shri Awardees". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.

வெளி இணைப்பு[தொகு]

முன்னர்
கிருயானத் குன்சூரு
இந்திய சாரணர் சங்கம்
1964–1983
பின்னர்
இலட்சுமன் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_மஜூம்தார்&oldid=3904854" இலிருந்து மீள்விக்கப்பட்டது