இராமேந்திர குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமேந்திர குமார் (Ramendra Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல்வாதியாகவும் இந்தியாவில் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். பேகுசராய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[1] இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலக உறுப்பினராகவும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசு கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளார். 1980-1995 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை பர்ககானை பிரதிநிதித்துவப்படுத்தி பீகார் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[2][3][4][5][6] மக்களவை மாற்றும் மாநிலங்களவை இரண்டிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேந்திர சர்மாவின் மகன் இராமேந்திர குமார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "lsbi08". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
  2. "Bihar Vidhan Sabha" (PDF).
  3. "Bihar Vidhan Sabha" (PDF).
  4. "Bihar Assembly Election Results in 1980". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  5. "Bihar Assembly Election Results in 1985". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  6. "Bihar Assembly Election Results in 1990". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேந்திர_குமார்&oldid=3858660" இலிருந்து மீள்விக்கப்பட்டது