இராஜமல்ல தேவராயன்- I

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜமல்ல தேவராயன்- I கங்க வம்சத்தின் 18வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூற சான்றுகள் இல்லை. இவர் குணதுத்தும ராயனின் தம்பிஎன்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. இவரே கொங்கு தேச அரசர்களில் கங்க வம்சத்தின் கடைசி அரசன், இவனுக்குப் பிறகு சோழ வம்சத்து ஆதித்திய வர்மன் கொங்கு தேசத்தை ஆண்டான். [1]

இரு தலைநகரம்[தொகு]

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டும், விஜயஸ்கந்தபுரத்தையும் தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் பல தேச மன்னர்களை வென்றும், சோழன் பாண்டியர்களோடு சமாதானம் செய்து அவர்களிடமிருந்து ஆட்சி செய்தார் எனவும் அறியமுடிகிறது.[2]

ஸ்ரீ ரெங்கபுரம்[தொகு]

இவன் ஆட்சிகாலத்தில் உபய காவேரி மத்தியில் அமைந்த திட்டில் இரங்க நாயகருக்கு கோவில் கட்டி, பிரகாரமும் கட்டி, இந்தப் பகுதிக்கு ஸ்ரீ ரெங்கபுரம்|ஸ்ரீ ரெங்கபுரம் ( தற்போதைய சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்)எனப் பெயரிட்டான்.[3]

இதையும் பார்க்கவும்[தொகு]

சான்றாவணம்[தொகு]

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-108)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-109)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

ஆதாரங்கள்[தொகு]

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜமல்ல_தேவராயன்-_I&oldid=2388547" இலிருந்து மீள்விக்கப்பட்டது