இரபிசங்கர் பால்
இரபிசங்கர் பால் | |
---|---|
பிறப்பு | 8 மே 1962 |
இறப்பு | 12 திசம்பர் 2017 கொல்கத்தா, இந்தியா | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–54–55)
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
பணி | எழுத்தாளர், இதழியலாளர் |
அறியப்படுவது | புதின எழுத்தாளர், சிறுகதை, இதழியலாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தோஜாகானாமா, அயனஜிபானா |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | பங்கிம் புரஷ்கார் (2011) |
இரபிசங்கர் பால் (Rabisankar Bal) (1962-2017) வங்க மொழியில் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார். இவர் தொழில்ரீதியாக ஒரு பத்திரிகையாளராக இருந்தார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார். இவர் டோசக்னாமா (நரகத்தில் உரையாடல்கள்) மற்றும் அய்னாஜிபான் (பிரதிபலிக்கப்பட்ட வாழ்க்கை) போன்ற நாவல்களுக்காக மிகவும் பிரபலமானவர் ஆவார். [1] இவை இரண்டும் அருணவ சின்ஹாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் சமகால வங்காள இலக்கியத்தில் ஒரு முக்கிய குரலாகக் கருதப்படுகிறார் மற்றும் இவரது பணிக்காக பல பரிசுகளை வென்றார். [2]
இரபிசங்கர் பால் 30 ஆண்டுகளாக 15 நாவல்கள் மற்றும் 5 சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்பை வங்காள மொழியிலும் மொழிபெயர்த்தார். [3]
பால் தனது "தி பயோகிராஃபி ஆஃப் மிட்நைட்" நாவலுக்காக மேற்கு வங்காள அரசாங்கத்தின் சுதபா ராய்சௌத்ரி நினைவுப் பரிசைப் பெற்றார். [4]
55 வயதில், குறுகிய காலத்தில் இவரை பாதித்த நோயைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள பிஆர் சிங் மருத்துவமனையில் இரபிசங்கர் பால் இறந்தார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "মানুষ গল্পটাই চায় : রবিশংকর বল".
- ↑ "শনিবার ।। রবিশংকর বল".
- ↑ IANS (13 December 2017). "Journalist, author Rabisankar Bal dead". Business Standard India. https://www.business-standard.com/article/news-ians/journalist-author-rabisankar-bal-dead-117121300020_1.html.
- ↑ "Journalist, author Rabisankar Bal dead". Retrieved 2021-09-29.
- ↑ "Journalist, author Rabisankar Bal dead". Retrieved 6 September 2020.