இனங்குறித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். இனங்குறித்தல் என்பது வட மொழியில் உபலட்சணம் எனப்படுகிறது.

நன்னூல் நூற்பா[தொகு]

ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே. - நன்னூல், 359 ஒருமொழி = பெயர், வினை, இடை, யுரி என்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்று, ஒழி தன் இனம்கொளற்கு உரித்து = ஒழிந்து நின்ற தன்தன் இனங்களைக் கொண்டு முடிதற்கு உரித்தாகும்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

கதிர்வேல் வெற்றிலை தின்றான்.[தொகு]

இத்தொடர், கதிர்வேல் வெற்றிலை மட்டுமா தின்றான். வெற்றிலையோடு அதற்கு இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலானவற்றையும் சேர்த்துத் தின்றான் எனப்பொருள்படும்.

இராமன், சோறு உண்டான்.[தொகு]

இத்தொடர், இராமன் அரிசி சோற்றை மட்டுமா உண்டான். சோற்றோடு அதற்கு இனமான குழம்பு, இரசம், தயிர், அப்பளம் முதலானவற்றையும் சேர்த்து உண்டான் எனப் பொருள்படும்

ஆதாரம்.[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனங்குறித்தல்&oldid=3052171" இலிருந்து மீள்விக்கப்பட்டது