இந்திராணி முகர்ஜி (பாடகி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராணி முகா்ஜி (பாடகி)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ইন্দ্রানী মুখার্জী
பிறப்பு25 சனவரி 1974 (1974-01-25) (அகவை 50)
அசன்சோல், மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்யாழ் , தும்ரி
தொழில்(கள்)குரலிசைக்கலைஞர்

இந்திராணி முகர்ஜி   (வங்காள மொழி : ইন্দ্রানী মুখার্জী  ; பிறப்பு 25 ஜனவரி 1974) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தைச் சோ்ந்த   இந்துஸ்தானி பாரம்பாிய இசை மற்றும் தும்ரி பாடகி ஆவார். அவரது பாடும் திறமை   கியால் ( கிரானா - ராம்பூர் பாணி) மற்றும் தும்ரி (புராப் ஆங்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

அவர் 1996 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மதிப்புமிக்க  ஐ.டி.சி இசை ஆராய்ச்சி கலைமன்றத்தின் பண்டிட் அருண் பதுரியின் வழிகாட்டுதலின் கீழ் ஆராய்ச்சி மாணவியாக இருந்துள்ளார் [1] . மறைந்த விதுஷி பூர்ணிமா சவுத்ரி [2] மற்றும் அலகாபாத்தின் மறைந்த பண்டிட் ராமஸ்ரேயா ஜாஜி ஆகியோருடன் தனது இசைக் கற்றலைத் தொடர்ந்தார் . 2012 முதல், இந்திராணி வாரணாசியின் விதுஷி மஞ்சு சுந்தரம் ஜி [3] என்ற இசை நிபுனரிடம் கற்கத் தொடங்கினார்.

இந்திராணி ஐ.சி.சி.ஆரின் (கலாச்சார உறவுகளுக்கான இந்திய மன்றம்) மற்றும் ஸ்பிக் மேக்கே கியால் மற்றும் தும்ரி ஆகிய இசைகளுக்கான அகில இந்திய வானொலியின் உயர் தர கலைஞராக இருந்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இந்திராணி 1974 ஆம் ஆண்டில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ளஅசன்சோலில் ஷிகா சாட்டர்ஜி (பாடகர்) மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கோபால் சாட்டர்ஜி (கட்டிடக் கலைஞர்) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தான் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்ததால், குழந்தை பருவத்திலிருந்தே அவர் இசையில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

தொடக்கத்தில் இந்திராணியின் இசைக் கற்றல் தனது தாய் மற்றும் அத்தை ஆகியோருடன் தொடங்கியது. அவருக்கு 3 வயதாக இருந்தபோது, மறைந்த பண்டிட் ஏ.டி.கனனின் சீடரான தனது தாய்வழி தாத்தாவாகிய ஸ்ரீ சஞ்சிப் பானர்ஜியிடமிருந்து தாலிம் எடுத்தார் .

3 வயதில் இந்திராணி

14 வயதில், அவரது தாத்தா தனது வாழ்க்கையின் நோக்கம் பற்றி கேட்ட பொழுது தான் ஒரு தொழில்முறை பாடகியாக மாற விரும்புவதாக பதிலளித்ததன் மூலம் அவருடைய இசையின் மீதிருந்த ஆா்வத்தை தானாகவே உணர்ந்தார்.தனது குடும்பத்தில் இசையை தொழிலாக எடுத்துக் கொண்ட முதல் உறுப்பினர் இவராவார். தனது முதல் பொது இசை நிகழ்ச்சியில், 1995 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருது பெற்ற பண்டிட் புத்ததேவ் தாஸ் குப்தாவைக் கவர்ந்தார், எனவே மேலும் இசை நுணுக்கங்களை தெரிந்து கொள்ள இந்திராணியை கொல்கத்தாவிற்கு இடம் பெயருமாறு அறிவுறுத்துகிறார். பர்த்வான் பல்கலைக்கழகத்தில் 1995 இல் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை முடித்த அவர் ஐ.டி.சி சங்கீத ஆராய்ச்சி கலை மன்றத்தில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில், கல்கத்தாவின் புகழ்பெற்ற ஐ.டி.சி சங்கீத ஆராய்ச்சி கலை மன்றத்தில் ஆராய்ச்சி மாணவியாக இந்திராணி தேர்ந்தெடுக்கப்பட்டார் அங்கு பண்டிட் அருண் பதுரியின் வழிகாட்டுதலில் இசை பயிற்சியை தொடர்ந்து வந்தார், மேலும் 2018 இல் அவர் இறக்கும் வரை தொடர்ந்தார். பண்டிட் கீழ் ஐ.டி.சி இசை ஆராய்ச்சி அகாடமியில் இந்திராணி முதல் அதிகாரப்பூர்வ ஆராய்ச்சி மாணவியாவார் [4] .

தொழில்[தொகு]

இந்திராணி தனது 14 வயதில் தனது இசை ஆர்வத்தை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார், பின்னர் அவர் பாரம்பரிய இசையில் தனது முறையான பயிற்சியை தீவிரமாக தொடர்ந்தார். ஐ.டி.சி சங்கீத ஆராய்ச்சி கலை மன்றத்தில் உண்டு உறைவிடப் படிப்பை முடித்த பின்னர், 2001 ஆம் ஆண்டில் சுயாதீனமானஇசைத் தொிழ் வாழ்க்கையை மேற்கொள்வதற்காக அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார், இருப்பினும் தனது தாலிம் பயிற்சியை பண்டிட் அருண் பதுரி ஜி தொ உடன் தொடர்ந்தார்

செயல்திறன்[தொகு]


Workshops[தொகு]

சுவிட்சர்லாந்தின் பாசல், அலி அக்பர் இசைக் கல்லூரியில் நடந்த பயிற்சிப் பட்டறை

இந்தியாவில் (கொல்கத்தா) கற்பிப்பதைத் தவிர, அவர் குரல் பட்டறைகளையும் நடத்தினார்  : - -

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

புகழ்பெற்ற தபேலா வீரரும், பழம்பெரும் குரு பண்டிட் சங்கர் கோஷின் மூத்த சீடருமான மறைந்த ஸ்ரீ அபுர்பா முகர்ஜியை இந்திராணி மணந்தார். இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டில் அஞ்சிஷ்ணு முகர்ஜி என்ற மகன் பிறந்தார். இவர் இசையின் குடும்ப பாரம்பரியத்தையும் பேணி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pt. Arun Bhaduri Publisher: ITC Sangeet Research Academy
  2. Vidushi Purnima Choudhury. Source: http://www.sarangi.net
  3. Vidushi Manju Sundaram: Understanding an enigma. Source: The Hindu, 2 November 2018
  4. Indrani Mukherjee . Publisher: ITC Sangeet Research Academy

வெளி இணைப்புகள்[தொகு]