இட்சூக்கோ பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இட்சூக்கோ பள்ளத்தாக்கு இந்திய மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் ஆகியவற்றின் எல்லையில் உள்ளது. மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள இசீ மலையில் இருந்து ஐந்து மணி நேரத்தில் சென்றடையலாம்.[1] இந்த வழியை மணிப்பூர் மாநில மலையேறுவோர் சங்கத்தினர் திறந்துவைத்தனர்.[2] இந்த பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட காலங்களில் பூக்கும் அரிய வகைப் பூக்களைக் கொண்ட தாவரங்கள் உள்ளன.

இட்சூக்கோ என்ற சொல் அங்காமி மொழியில் இருந்து தோன்றியது. இதற்கு தண்ணீர் என்று பொருள். இந்த பள்ளத்தாக்கில் குளிர்ச்சியான நீர் பாய்வதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[3] மாவோ நகரம் மணிப்பூர் உடனான நாகாலாந்தின் எல்லைக்கு அருகில் உள்ளது. நாகாலாதில் உள்ள விஸ்வேமா என்ற ஊரில் இருந்தும் இந்த பள்ளத்தாக்கை வந்தடையலாம்.[4]

இந்த பள்ளத்தாக்கை சென்றடைய அரசு சார்பற்ற அமைப்புகளும், சுற்றுலா நிறுவனங்களும் உதவுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "The Assam Tribune Online". www.assamtribune.com. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.
  2. "New Dzukou trekking route inaugurated". Eastern Mirror. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.
  3. "Senapati District, Government of Manipur, India". senapati.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.
  4. "New Dzukou trekking route inaugurated". Eastern Mirror. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்சூக்கோ_பள்ளத்தாக்கு&oldid=3543402" இலிருந்து மீள்விக்கப்பட்டது