இடக்கரடக்கல்
Jump to navigation
Jump to search
சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.
“இடக்கர்” என்றால் சான்றோர் எனப்படுவர்
"அடக்கல்" என்றால் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகள் என்று பொருள்[1].
அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக் கூறும் போது சான்றோர் அவையில் கூற முடியாத சொற்களைத் தான் இடக்கரடக்கல் என்பர்.
தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
சில உதாரணங்கள்[தொகு]
- மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
- கால் கழுவி வந்தான்
- ஒன்றுக்குப் போனான்
- வயிற்றுப்போக்கு (அவனுக்கு வயித்தால போகுது)
- விளக்கு மங்கலாக ஒளிர்வதை கூடப்பற்றுகிறது எனக்கூறல்.
- விளக்கை குளிர்வித்தான்
வெளி இணைப்புகள்[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- ↑ "இடக்கரடக்கல் விளக்கம்". பார்த்த நாள் மார்ச்சு 06, 2013.