இசான் சந்திர மாணிக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசான் சந்திர மாணிக்கியா (Ishan Chandra Manikya) 1849 முதல் 1862 வரை திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். [1] [2]

வரலாறு[தொகு]

இவர் கிருஷ்ண கிசோர் மாணிக்கியாவின் மகனாவார். இவரது மகன் நபத்விப்சந்திர தேவ் பர்மன் ஒரு பிரபலமான இந்திய சித்தார் கலைஞரும் மற்றும் துருபத் பாடகரும், இசையமைப்பாளருமான எஸ். டி. பர்மனின் தந்தையும் , மற்றொரு இசையமைப்பாளர் ஆர். டி. பர்மனின் தாத்தாவும் ஆவார்.

இவர் மணிப்பூரி அரச வம்சாவளியைச் சேர்ந்த மொய்ராங்தேமின் முக்தவலி, கெய்ஷாமின் சானு ஜதீசிவரி மற்றும் குமந்தேமின் சந்திரேசுவரி என மூன்று ராணிகளை மணந்தார். [1] .862 இல் இவர் இறந்த பிறகு, இவரது சொந்த மகன்களுக்குப் பதிலாக இவரது சகோதரர் வீர் சந்திர மாணிக்கியா அரியணை ஏறினார்.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Sanajaoba, Naorem, ed. Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization. Vol. 4. Mittal Publications, 1988.
  2. Kingdom of Tripura - University of Queensland
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசான்_சந்திர_மாணிக்கியா&oldid=3801964" இலிருந்து மீள்விக்கப்பட்டது