ஆவணங்கட்டில்களரி விஷ்ணுமாயா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவணங்கட்டில்களரி விஷ்ணுமாயா கோயில்
விஷ்ணுமாயா

ஆவணங்கட்டில்களரி விஷ்ணுமாயா கோயில் என்றழைக்கப்படுகின்ற மாற்றாக ஆவணங்காட் சாத்தன் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பெரிங்கோட்டுகராவில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . இந்தக் கோயில் விஷ்ணுமாயா கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். விஷ்ணுமாயா, சாத்தன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.

இக்கோயில் கேரளாவில் உள்ள, குறிப்பாக மலபாரில் உள்ள, அனைத்து விஷ்ணுமயக் கோயில்களின் தலைமைக் கோயிலாக அமைந்துள்ளது. . இக்கோயில் "மூலஸ்தானம்" என்றும் அழைக்கிறது. கோவிலின் மூலவர் உக்கிர கோலத்தில், கிழக்கு நோக்கி உள்ளார். அவருக்கு இரு கைகளும் பிற குணநலன்களும் உண்டு. ஒரு கையில் குருவடி எனப்படுகின்ற மந்திரக்கோலும், மற்றொரு கையில் அம்ருத கும்பம் எனப்படுகின்ற மந்திர பானையும் உள்ளது. தண்ணீர் எருமை மீது சவாரி செய்யும் நிலையில் உள்ளார். மந்திர சக்திக்காக இந்த மூலவர் பெயர் பெற்றுள்ளார். [1] [2]

இக்கோயிலைச் சுற்றி ரிசினஸைச் இருப்பதால் இக்கோயில் இப்பெயரைப் பெற்றது. மலையாளத்தில் ரிசினஸ் செடியை "ஆவணகு" என்றும், காடு என்றால் "காடு" என்றும் அழைப்பர். அவ்வகையில் இக்கோயில் இப்பெயரைப் பெற்றது. களரி என்றால் கேரளத்திற்கான பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி அல்லது கற்பிக்கும் இடம் ஆகும். இந்தக் கோயில் பெரும்பாலும் விஷ்ணுமாயா மற்றும் அவரது 389 சகோதரர்களின் மூல வடிவமாக கருதப்படுகிறது. கடவுள் தனது 399 சகோதரர்களுடன் பிறந்தபோது, சிவ பூதங்களுக்கும் (சிவனின் படை) பிருக ராட்சஸுக்கும் இடையே நடந்த போரில் 10 சகோதரர்கள் தம் உயிரை தியாகம் செய்தனர். [3] போரின் போது பத்து சகோதரர்கள் பிரம்மாஸ்திரத்தை உட்கொண்டு, ராக்ஷஸ் பிரிகாவைக் கொல்ல சிவ பூதங்களுக்கு உதவினர். [4]

கேரளா மாநிலத்தில் நடுவில் உள்ள இக்கோயில் தமிழ் பேசுபவர்களால் "விஷ்ணுமய சாத்தன் கோயில்" என்று அழைக்கப்படுகிறது. சாஸ்தாவிலிருந்து வருவதே சாத்தன் என்ற பெயர் ஆகும்.

வரலாறு[தொகு]

பழங்காலத்தில் இக்கோயில் ஒரு சிறிய கோயிலாக இருந்ததாகவும், விஷ்ணுமாயாவின் மூர்த்தியை தனது களரி ஒன்றின் அருகே கேலுன்னி பணிக்கர் நிறுவியதாகவும் கேரள மக்கள் நம்புகின்றனர். கடவுளின் நேரடிப் பார்வையில் பூஜைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு அருகில் ஒரு மாமரம் உள்ளது. அருகில் உள்ள சிறிய பாறையான "வள்ளியச்சன் கொட்டில்" என்பது இந்த மூலவருக்கு சக்தியைத் தருவதாக நம்பப்படுகிறது.

இக்கோயிலில் அனைத்து மதத்தினரும் செல்ல அனுமதி உண்டு. இக்கோயில்சபரிமலை ஐயப்பன் கோயிலுடன் மிகவும் தொடர்புடையதாகும். சபரிமலை தவிர மற்ற அனைத்து கோயில்களும் பெண்களை கோவிலில் அனுமதிக்கின்றனர். ஆராட்டுப்புழா பூரம் திருவிழாக் காலத்தில், தெய்வம் கோயிலுக்குச் சென்று விஷ்ணுமாயாவை சந்திப்பதால், இது "பூரம் புறப்பாடு" என்று அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு[தொகு]

கிழக்கு நுழைவாயில்

நெல் வயல் சூழ்ந்த வளாகத்தில் சுமார் பத்து ஏக்கர் நிலத்தின் நடுவில் இக் கோயில் அமைந்துள்ளது. "மணிமண்டபம்" அல்லது "மூலவர் கருவறை" கிழக்கு நோக்கி உள்ளது. சிறிய பகவதி சன்னதியின் கிழக்குப் பக்கத்தில் இரண்டு சர்ப்பக்காவு உள்ளது.. மேற்குப் பகுதியில் உள்ள கோயில் குளம், கிணறு ஆகப் பயன்படுகிறது. இங்கு குளிப்பதற்கு அனுமதி இல்லை.

திருவிழாக்கள்[தொகு]

"வெள்ளட்டுமஹோல்சம்" திருவிழா, கும்பம் மாதம் தொடங்கி பத்து நாட்கள் திருவிழாவாகும். இது பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நடைபெறுகிறது. 'எழுநல்லது' சடங்குடன் இவ்விழாவின் முக்கிய அம்சமாகும். இந்த சடங்கில் பங்கேற்க "திரா மணர்" உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது விஷ்ணுமாயா கடவுளையும் அவரது அசுரர்களையும் திருப்திப்படுத்துவதாகும். கர்கிடாகம், விருட்சிக மலையாள மாதங்களுக்கு நாள்களுக்கு முன்பாக (பிப்ரவரி மார்ச்) காலாம்பட்டு விழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "AVANANGATTIL KALARI". 2 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
  2. "Avanangattil Kalari Lord Sree Vishnumaya Temple". 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  3. "Sree Vishnumaya Temple of Maha Vishnu in the form of Vishnu". 2 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
  4. Conversations on the Beach: Fishermen's Knowledge, Metaphor and Environmental Change in South India. 

வெளி இணைப்புகள்[தொகு]