ஆடை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடை
இயக்கம்இரத்தின குமார்
தயாரிப்புவிஜி சுப்பிரமணியன்
கதைஇரத்தின குமார்
இசைபிரதீப் குமார்
ஊர்க்கா (இசைக்குழு)
நடிப்புஅமலா பால்
விவேக் பிரசன்னா
ரம்யா சுப்பிரமணியன்
ஒளிப்பதிவுவிஜய் கார்த்திக் கண்ணன்
படத்தொகுப்புஷபீக் முகமது அலி
கலையகம்எஸ் கே ஸ்டுடியோஸ்
விநியோகம்ஸ்ரீ உமயாள் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 19, 2019 (2019-07-19)
ஓட்டம்141 minutes
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடை என்பது 2019ஆம் ஆண்டு இரத்தின குமார் எழுதி, இயக்கியதும் வீ ஸ்டுடியோஸின் தயாரிப்பிலும் வெளியான இந்திய தமிழ் மொழி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான ஊர்க்கா இசைக்குழுவுடன் இணைந்து பிரதீப் குமார் படத்தின் ஒலிப்பதிவை கையாண்டுள்ளார். அமலா பால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 19 சூலை 2019 அன்று வெளியான இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் சராசரியாகத் தான் ஓடியது. [1]

கதை சுருக்கம்[தொகு]

காமினி மிகவும் தன்னிச்சையான, துணிவான, அதிகளவு பெண்ணிய உணர்வு கொண்ட ஒரு செய்தி வழங்குபவர். சித்தாந்தத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடையிலான இயக்கவியல் பற்றிய புரிதல் அவளுக்கு இல்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அவளது இளமை பருவத்தில், தந்தையின் மறைவை தொடர்ந்து தனது தாயால் வளர்க்கப்பட்டாள். அவளது தாயின் பழமைவாத மனப்பான்மை காரணமாக, அவளது அணுகுமுறை தொடர்பாக காமினிக்கும் அவளது தாயாருக்கும் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

அவள் தனது தோழி ஜெனிஃபர் மற்றும் சிலருடன் #டேக் சேனலில் ஒரு குழுவாக பணியாற்றுகிறாள். சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக, சந்தேகமடையாத நபர்களிடம் கொலை முயற்சிகள், மருத்துவ அவசரநிலைகள் போன்ற எரிச்சலூட்டும் குறும்புகளைச் செய்பவர்களாக இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக அறியப்பட்டவர்களாவார்கள். காமினியின் பிறந்த நாளன்று, அவளது தாயார் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் காமினி ஒருமுறையாவது தீவிரமான செய்தி வாசிப்பாளராக முயற்சி செய்ய கோரி ஒரு சவால் விடுகிறார். ஆனால் காமினி அதை மறுத்து விடுகிறாள். காமினி பணிபுரியும் செய்தி சேனல் தொலைதூரத்தில் உள்ள புதிய வளாகத்திற்குச் செல்வதற்கு முன், தற்போதைய கட்டிடத்தில் இயங்கும் கடைசி நாள் அவளது பிறந்த நாள் அன்று தான். அன்று பழைய கட்டிடத்தில் இருந்து கடைசியாக ஒளிபரப்பப்பட இருந்தது ஜெனிஃபர் செய்யும் ஒரு உணர்வுபூர்வமான, விடைபெறுதலின் ஒரு பகுதியான நேரலை செய்தி ஊட்டமாகும். அதற்கு ஜெனிஃபர் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வேளையில் அவளை சந்திக்கும் காமினிக்கு தன் அம்மா முன்பு கூறியது நினைவுக்கு வரவே, அவள் மனதில் செய்தி வாசிப்பு பற்றிய சவால் உருவெடுக்கிறது. நேரடி ஊட்டத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு ஜெனிஃபர் காணாமல் போகவே, வேறு எந்த வழியும் இல்லாமல், காமினி மாற்று செய்தி வாசிப்பாளராக பணியாற்ற வரவேண்டியதாயிற்று. அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் மீறி, காமினி சிறப்பாகவே செய்தி வாசிக்கிறார். அப்பொழுது மேல் தளக் கழிவறையின் கதவு மாட்டிக்கொண்டதால் உள்ளே மாட்டிக்கொண்ட ஜெனிஃபர் பாதுகாப்பாக வெளியே வருவது காண்பிக்கப்படுகிறது. நிறுவனம் கட்டிடத்தை காலி செய்யவே, காலியான கட்டிடம் வார இறுதியில் மூடப்படாமல் விடப்படுகிறது.

மாலையில் காமினியும் அவளது தோழிகளும் அவர்களது காலியான அலுவலகக் கட்டிடத்தில் மாயவித்தை காளான்கள் கலந்த பானங்கள் மற்றும் உணவுகளுடன் அவளது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். காமினி தன் அம்மாவுடன் தொலைபேசியில் உரையாடும் போது, தனது திறமையை நிரூபிக்க தான் தான் ஜெனிஃபரை கழிவறைக்குள் வைத்து பூட்டி வைத்ததாக அறியாமல் கூறுகிறாள். காமினியுடன் சண்டையிடும் ஜெனிஃபர், செய்திகளை நிர்வாணமாக படிக்கும்படி சவால் விடுகிறார். மாயவித்தை காளான்கள் காரணமாக அனைவரும் போதையில் இருக்கவே, காமினியின் ஆடை அவிழ்ப்பு தொடங்குகிறது.

மறுநாள், காமினி காலி அலுவலகத்தில் உறக்கத்தில் இருந்து விழிக்கும் போது தனது துணிகளோ திறன் பேசியோ இல்லாது போகவே, அவள் நிர்வாணமாக, உணர்வற்ற நிலையில் உதவி பெற முயற்சித்துக்கொண்டு, பகல்வேளையை கழிக்கிறாள். அவளுக்கு தனது திறன் பேசி கிடைத்த போதிலும், அதில் பாக்கி தொகை இல்லாமல் போகவே, வெளிச்செல்லும் அழைப்புகளை அவளால் செய்ய இயலவில்லை. கட்டணமில்லா எண்ணில் உணவை ஆர்டரைச் செய்துவிட்டு காத்திருக்கிறாள். உணவு வழங்க வரும் நபரைத் தாக்கி அவனது ஆடைகளைப் பெற்று வெளியேறுவதற்காக காமினி இரும்புக் குழாய் ஒன்றை ஆயுதமாக ஏந்தி நிற்கவே, உணவு வழங்க வந்தது ஒரு பெண் என்பதை கண்டு வியக்கிறாள். அவள் திடீரென்று இரத்த இழப்பால் மயக்கமடைகிறாள். பின்னர் காமினி அவளது ஆடைகளை கழற்ற முயல்கிறாள், ஆனால் அந்த பெண்ணோ எழுந்து அவளை தடுக்கிறாள். அதனால் வெகுண்ட காமினி அவள் தலையில் பைப்பால் அடித்துவிட்டு இரண்டு உள்ளூர்வாசிகள் கட்டிடத்திற்குள் நுழையும் சத்தம் கேட்கவே, அதை உற்று கேட்கிறாள். உள்ளூர்வாசிகள் உணவு வழங்க வந்த   பெண்ணைக் கண்டுபிடித்து, அவள் இறந்துவிட்டதாக எண்ணி காவலரை அழைக்கின்றனர். காமினி அவர்களிடமிருந்தும் காவல்துறையினரிடம் இருந்தும் மறைந்து கொள்ளவே, அவர்கள் வந்து அப்பெண்ணை உயிர்ப்பிக்கின்றனர்.

காவலர்கள் சென்ற பின்னர் காமினி அந்த கட்டிடத்தில் தனிமையில் பூட்டப்படுகிறாள். அப்போது அவளது தோழியிடமிருந்து அவளுக்கு ஒரு அழைப்பு வருகிறது. போதை அதிகமாக இருந்ததால் முந்தைய இரவு காவல்துறையால் தாங்கள் கைது செய்யப்பட்டதை வெளிப்படுத்துகிறாள் தோழி. ஆனால் அவள் பேசுவதற்குள், அவளுடைய கைபேசியின் மின்கலம் காலியாகி விடுகிறது. இதற்கிடையில், காமினியின் தாய் தனது மகள் காணாமல் போனது குறித்து அவரது நண்பர்கள் சிறையில் இருக்கும் அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

கதவைத் திறக்கும் முயற்சியில் காமினி நுழைவாயிலின் கண்ணாடி ஜன்னலை உடைத்து, உடைந்த கண்ணாடியால் தன் கையில் காயம் அடைகிறாள். பின்னர் அவள் இரவில் வெளியே செல்கிறாள். வெளியே ஒரு குப்பைத் தொட்டியைக் காண்கிறாள், ஆனால் அவள் தன் உடம்பை மறைத்துக்கொள்வதற்கு எதையாவது கண்டுபிடிக்கும் முன் நாய்களால் துரத்தப்படுகிறாள். நாய்கள் பின்தொடர அவள் மீண்டும் கட்டிடத்திற்குள் ஓடுகிறாள். அவள் கீழே விழுந்து உடைந்த கண்ணாடித்துண்டுகளால் காயமடைந்து, கழிவறையில் தன்னைப் பூட்டிக்கொள்வதற்கு முன், நம்பிக்கையிழந்து அழத் தொடங்குகிறாள். அவள் தன் அச்சமற்ற இயல்பைப் பற்றியும், அலுவலகக் கட்டிடத்திலிருந்து தான் கண்ணியத்துடன் வெளியேறுவதைப் பற்றி அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிகளையும் நினைவுகூர்கிறாள். பின்னர் அவள் கழிப்பறை காகிதத்தால் தனது பிறப்புறுப்புகளை மறைத்துக் கொண்டு கட்டிடத்திலிருந்து வெளியேறி மழையில் சிக்கித் தவிக்கிறாள். காவலர் டேப்பைப் கண்டு அதனால் தன்னை மூடிக்கொண்டு, ஒரு வழிப்போக்கரிடம் மழை கோட்டைக் கொடுத்து உதவுமாறு கெஞ்சுகிறாள். ஆனால் வழிப்போக்கர் காமினியின் அசல் ஆடைகளுடன் ஒரு பையைக் கொடுக்கவே, அவள் குழப்பத்தில் ஆழ்கிறாள். அவள் ஆடைகளை அணிந்துகொண்டு, அந்த வழியாகச் செல்பவர்களைத் தொடர தொடங்குகிறாள். அவர்கள் அலுவலகக் கட்டிட வாயிலுக்குள் வரும் ஒரு போலீஸ் வேனைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறார்கள். அந்த வழிப்போக்கர் முன்பு காமினி தாக்கிய அதே உணவு வழங்க வந்த பெண் என்பது தெரியவருகிறது; காமினியின் நிர்வாண துயரத்திற்கு தான் தான் காரணம் என்பதை அவள் வெளிப்படுத்துகிறாள். அவர்கள் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள், காமினி பழிவாங்குவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகிறாள். காமினி அப்பொழுது திடீரென்று ஒரு ஃப்ளாஷ்பேக்கில் தாக்கப்படுகிறாள்.

உணவு வழங்கும் பெண் நங்கேலி (அனன்யா ராமபிரசாத் நடிக்கும் பாத்திரம்), மாஞ்சோலை மலையில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த குடியியல் பணி ஆர்வலரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய குடியியல் பணிகள் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவளுமாவாள். இந்திய குடியியல் பணிகளுக்கான பிரதான தேர்வுக்காக அவள்து குடும்பத்தால் சென்னைக்கு அனுப்பப்பட்டாள். ஒரு ஆட்டோவுக்காகக் காத்திருக்கும் போது, காமினியின் தோழிகள் அவளிடம் மருத்துவம் சார்ந்த ஒரு குறும்புத்தன விளையாட்டை விளையாடவே, அவள் தேர்வில் தோல்வியடைந்து தனது ஆரம்பநிலையையும் வீணாக்குகிறாள். அடுத்த ஆண்டு தேர்வுக்காக அப்பெண்ணின் தாய் சென்னைக்கு வந்தபோது மயங்கி விழுந்தார், இது மற்றொரு குறும்பு என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. மீண்டும் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நிலையில் உணவு வழங்கும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறாள். திடீரென்று ஒருநாள் காமினியை அலுவலகத்திற்கு உணவு வழங்க வந்தபோது சந்தித்து, காமினி வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க நேரிடுகிறது .

கோபமடைந்த நங்கேலி பழிவாங்க முயல்கிறாள். காலி அலுவலகக் கட்டிடத்தில் காமினியும் அவளுடைய தோழிகளும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டு காமினியைப் பின்தொடர்கிறாள். ஒரு நாள் அந்த கட்டிடத்தில் நிர்வாணமாக தங்கலாம் என்று காமினி தன் தோழிகளிடம் கூறுவதை அவள் கேட்கிறாள். கழிவறைக்கு காமினி நடந்து செல்வதை பார்த்து, காமினியின் தோழிகள் மேலும் குடிக்க செல்வதையும் கேட்கிறாள். பின்னர் காமினி மற்றும் அவளுடைய தோழி ஜெனிஃபர் இருவரும் கழிவறையில் சென்றபின் கட்டிடத்துக்குள் நுழைகிறாள். நங்கேலி ஜெனிஃபரின் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி ஜெனிஃபரின் அப்பாவை அழைத்து, அவள் வீட்டிற்கு வர முடியாத அளவுக்கு குடிபோதையில் இருப்பதால் அவளை அழைத்துச் செல்லும்படி கூறுகிறாள். ஜெனிஃபர் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, நங்கேலி எல்லாவற்றையும் அகற்றுவதற்காக முழு அலுவலகத்தையும் சுத்தம் செய்கிறாள். அதன் பின் காமினியின் ஆடைகளை வளித்துளைக்குள் மறைத்து வைப்பதற்கு முன் அவற்றை அகற்றினாள். காமினி எழுந்ததும், நங்கேலி அவளை உன்னிப்பாகக் கண்காணிக்கிறாள். காமினி உணவு ஆர்டர் செய்வதைக் கேட்டு, அதை கொண்டுவரும் ஆளுக்கு பணம் கொடுக்க வெளியே ஓடியதை கண்டு, தானே உணவை கொண்டு வருபவளாக நடிக்கிறாள்.

காமினி எழுவதற்கு முன், அந்த வழியாகச் சென்ற ரத்த தான பேருந்தில் நங்கேலி ரத்த தானம் செய்கிறாள். அலுவலகத்திற்குள் நுழைந்ததும், காமினி உதவுகிறாளா என்று பார்க்க மயக்கமடைவது போல காமினியிடம் நடிக்கிறாள். ஆனால், உதவுவதற்கு மாறாக காமினியோ அவள் தலையில் அடிக்கிறாள். சமூக ஊடகங்கள் எவ்வாறு ஒரு சுயபடமெடுத்தலை அல்லது சின்ன குறும்புகளைக் கூட ஆபத்தானதோர் உலகத்தை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதை நங்கேலி வெளிப்படுத்துகிறாள். உலகில் உள்ள அனைவரும் சமூக ஊடகங்களின் மீது பைத்தியம் பிடித்தது தனது நிகழ்ச்சியின் தவறா என்று காமினி கேட்க, ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான சுதந்திரம் இருக்கும்போது, அதை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று நங்கேலி சுட்டிக்காட்டுகிறாள்; இது காமினி தன் தவறை உணர வைக்கிறது. நங்கேலி பழிவாங்க விரும்பவில்லை, ஆனால் காமினி எவ்வளவு துயரத்தை ஏற்படுத்தினாள் என்பதை அவள் தெரிந்து கொள்ள விரும்பினாள். காமினி தன்னை காயப்படுத்திய போதிலும், தான் பாதுகாப்பாக இருக்கிறாளா என்று பார்ப்பதற்காக மருத்துவமனை மற்றும் வெளியில் உள்ள காவலர்களை விட்டு ஓடி வந்ததை அவள் விளக்கினாள். காமினி ஒரு சுதந்திரமான பெண்ணாக இருப்பதால் வெட்கம் இல்லாமல் நிர்வாணமாக அலுவலகத்தை விட்டு வெளியேறுவாள் என்றும் அவள் நினைத்தாள். அதற்கு பதிலாக, தான் வெட்கமற்றவள் அல்ல என்பதை காமினி வெளிப்படுத்தினாள். காமினி கண்ணாடியை மிதித்து நாய்களிடமிருந்து ஓடியதில் காயம் அடைந்ததைப் பார்த்து நங்கேலியும் வருத்தப்படுகிறாள். அவள் காமினியிடம் மன்னிப்பு கேட்க, இருவரும் பிரிகின்றனர். காமினி தனது சக ஊழியர்களுடன் அலுவலகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்கு பொது இடங்களில் அர்ங்கேற்றப்படும் குறும்புகளில் இருந்து விலகுகிறாள். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரு பாடலாசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்படுவதற்கு அவள்தான் காரணமென சித்தரிக்கப்படுகிறது. படம் முடிவடையும் போது, நங்கேலி உணவை வழங்கும் நபராக பணிபுரியும் போது தனது தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதாகக் காட்டப்படுகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

நிர்வாணக் காட்சிகளில் பிரத்யேகமான உடை அணிந்துகொண்டு நடிக்க இயக்குநர் அனுமதித்த போதும், 15 பேர் கொண்ட படக்குழுவினர் முன் நிர்வாணக் காட்சிகள் எதுவும் காட்டப்படாவிட்டாலும் அக்காட்சிகளை முழு நிர்வாணமாக நடிக்கத் தேர்ந்தெடுத்ததாகவும் அமலா பால் ஒரு பேட்டியில் கூறினார். திரையில்; சில காட்சிகளை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவர் தோல் நிற ஆடைகளை அணிந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று சில பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினர். [2] அவர் 20 நவம்பர் 2018 வரை படத்திற்கான படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது [3]

வெளியீடு[தொகு]

இப்படம் 19 சூலை 2019 அன்று வெளியிடப்பட்டது [4]

குறிப்புகள்[தொகு]

  1. உபாத்யாயா, பிரகாஷ் (20 சூலை 2019). "ஆடைக்கான முதல் போரில் அமலா பால் வென்று, அசத்தலான நடிப்பால் வெறுப்பாளர்களை அமைதிப்படுத்தினார்". சர்வதேச வர்த்தக நேரம். https://www.ibtimes.co.in/amala-pauls-aadai-wins-first-battle-silences-haters-stunning-performance-801993. 
  2. "'ஆடை' படத்தில் நிர்வாணக் காட்சி படமாக்கப்பட்டது குறித்து அமலா பால் மனம் திறந்து, 'நான் கவலையாக இருந்தேன்'". பார்க்கப்பட்ட நாள் 2019-07-09.
  3. "'அதோ அந்த பறவை போல' படத்தில் அமலா பால் காட்டில் சிக்கினார்". பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.
  4. "ஆடைக்கான முதல் போரில் அமலா பால் வென்று, அசத்தலான நடிப்பால் வெறுப்பாளர்களை அமைதிப்படுத்தினார்". https://www.ibtimes.co.in/amala-pauls-aadai-wins-first-battle-silences-haters-stunning-performance-801993. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடை_(திரைப்படம்)&oldid=3807176" இலிருந்து மீள்விக்கப்பட்டது