அருண் கமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருண் கமல் (Arun Kamal) நவீன இந்தி இலக்கியத்தில் முற்போக்கான, கருத்தியல் கவிதை நடையைக் கொண்ட ஓர் இந்தியக் கவிஞர். கவிதைகள் மட்டுமின்றி விமர்சனம் எழுதியும் கமல் இந்தியிலும் மொழியாக்கம் செய்துள்ளார்.[1][2] இவரது முதல் புத்தகம் 'அப்னி கேவல் தர்' 1980-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேலும், இந்தப்புத்தகம் இவரை சமகாலத்தின் முக்கியமான கவிஞராக நிலைநிறுத்தியது. 1989- ஆம் ஆண்டில் இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு 'சபூட்' வெளியிடப்பட்டது. 1996-ஆம் ஆண்டில் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு 'புதிய இடம்' இவருக்கு இந்தி மொழிக்கான சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத்தந்தது.1998-ஆம் ஆண்டில் இந்தி மொழி படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]

இவர் பீகாரில் உள்ள நஸ்ரிகஞ்சில் 1954 பிப்ரவரி 15 அன்று பிறந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பாட்னாவில் வசிக்கிறார். 

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arun Kamal's Biography". பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  2. "Arun Kamal's Biography". பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  3. https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#HINDI. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_கமல்&oldid=3944222" இலிருந்து மீள்விக்கப்பட்டது