அரி மோகன் பாங்கூர்
அரி மோகன் பாங்கூர் Hari Mohan Bangur | |
---|---|
பிறப்பு | 1952/1953 (அகவை 70–71)[1] |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை |
பணி | வணிகர் |
பட்டம் | முதன்மை செயல் அலுவலர், சிறீ சிமெண்ட்டு |
பெற்றோர் | பெனு கோபால் பங்கூர் |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
அரி மோகன் பாங்கூர் (Hari Mohan Bangur) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். 1952/1953 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். தற்போது இந்தியாவின் இராசத்தான் மாநிலம் பியாவர் நகரத்திலுள்ள சிறீ சிமெண்ட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை.[தொகு]
இவர் பெனு கோபால் பாங்கூரின் மகனும், முக்னி ராம் பாங்கூரின் கொள்ளுப் பேரனும் ஆவார்.[2]
இவர் பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பொறியியல் பட்டம் படித்தார்.[1]
தொழில் வாழ்க்கை[தொகு]
பாங்கூர் 1992 ஆம் ஆண்டு முதல் சிறீ சிமெண்ட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார. மேலும் இதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.[1]
2002 ஆம் ஆண்டில் சிறீ சிமெண்ட்டு நிறுவனம் ஓர் ஆழ்ந்த சிக்கலில் இருந்தது, மேலும் இவர் தனது தந்தையின் ஒப்புதலுடன், பிரெஞ்சு சிமெண்ட்டு நிறுவனமான விக்காட்டுடன் கிட்டத்தட்ட 50/50 பங்குகளை இணைக்க ஒப்புக்கொண்டார்.[3] பின்னர் இணைப்பை நிராகரித்து, ஒரு தசாப்தத்தில் தொழிற்சாலையின் திறனை பத்து மடங்கு அதிகரித்து, பங்கு விலை பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ரூ 45 என்பதை ரூ 4,500 என்ற அளவுக்கு உயர்த்தினார்.[3]
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிறீ சிமெண்ட்டில் 65% பங்குகளை பாங்கூர் குடும்பம் வைத்திருந்தது.[2]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார், அவர் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார்.[3][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Stocks. "Executive Profile: Hari Mohan Bangur". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Shree Cement's Bangurs Break Tradition To Emerge Among Asia's Richest". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
- ↑ 3.0 3.1 3.2 "How HM Bangur Turned Around Shree Cement". Forbes India. 18 November 2013. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.