அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் (Government Medical College, Nagappatinam) என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக 2021-2022 கல்வி ஆண்டு முதல் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட, நாகப்பட்டினம் அருகே உள்ள ஒரத்தூரில் 60.04 ஹெக்டேரில் ரூபாய் 366.8 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.[1] இதன் பணிகள் முடிவடைந்தை அடுத்து இக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சனவரி 12, 2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சிமூலம் இக்கல்லூரியினைத் திறந்து வைத்தார்.[2] நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றிற்கு 150 மாணவர் வீதம் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாகப்பட்டினம் ஒரத்தூரில் - மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியைடிசம்பருக்குள் முடிக்க வேண்டும் : ஆய்வுக்குப் பின் ஆட்சியர் உத்தரவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  2. "Government Medical Colleges Inagurated" (in English). The Hindu (Tiruchirapalli): p. 5. 12.01.2022.