அப்சராகொண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்சராகொண்டா
Apsarakonda

ಅಪ್ಸರಕೊಂಡ
Country இந்தியா
மாநிலம்கர்நாடகா
Regionகனரா
மாவட்டம்வட கன்னட மாவட்டம்
Talukஒன்னாவரா
Languages
 • Officialகன்னடம்

அப்சராகொண்டா (Apsarakonda) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் வடகன்னட மாவட்டத்தில் உள்ள ஒன்னாவரா என்ற துறைமுக நகருக்கு அருகில் உள்ள ஒரு சுற்றுலா கிராமம் ஆகும். ஒன்னாவரா பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]

பெயர்காரணம்[தொகு]

அப்சராகொண்டா என்பதன் பொருள் தேவதைகள் குளம் என்பதாகும். கடற்கரையைப் பார்த்தபடி அக் குளம் இருப்பதானால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இங்கிருந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் ஓய்வெடுக்கவும் தேவதைகள் தேர்ந்தெடுத்த இடம் இப்பகுதியாகும் எனப் புராணக்கதைகள் கூறுகின்றன.[2]

சிறப்புகள்[தொகு]

கடற்கரையை நோக்கியுள்ள குளம்

மகா விநாயகர் கோயில் மற்றும் உக்ர நரசிம்மர் கோயில் ஆகிய கோயில்களுக்குப் பின்புறமாக அப்சராகொண்டா நீர்வீழ்ச்சி இருக்கிறது. மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பாண்டவர் குகைகள் இங்கிருப்பதாகக் கூறப்படுகின்றன. இக்குளத்திற்கு அருகில் பிரபலமடையாத கடற்கரைகள் உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uttara Kannada Tourism". Archived from the original on 2015-06-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
  2. "Apsarakonda Falls, Honnavar – An Enchanting Destination". பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
  3. "Apsara Konda Beach".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சராகொண்டா&oldid=3541037" இலிருந்து மீள்விக்கப்பட்டது