அனைத்திந்திய சாதுக்கள் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்திந்திய சாதுக்கள் கூட்டமைப்பு அல்லது அகில பாரத அக்காரா பரிசத் (Akhil Bharatiya Akhara Parishad|ABAP) இந்தியாவில் வாழும் இந்து சமய சாதுக்களின் உயர்நிலை கூட்டமைப்பாகும்.[1][2] இக்கூட்டமைப்பில் 14 சாது சங்கங்கள் இணைந்துள்ளது. அவற்றுள் ராம ஜென்ம பூமி தொடர்பான நிர்மோகி அக்காராவும் மற்றும் ஸ்ரீதத்தாத்திரேயர் அக்காரவும் முக்கிய சாதுக்களின் சங்கங்கள் ஆகும்.

அமைப்பு[தொகு]

அக்காரா எனும் இந்தி மொழிச் சொல்லிற்கு மல்யுத்த வளையம் அல்லது வாதப் போரிடும் இடம் எனப் பொருள்படும்.[3]இச்சாதுக்களின் கூட்டமைபான அக்காராவில், பெரும்பான்மையாக சைவ சமயம் மற்றும் வைணவ சமயம் தொடர்பான சாதுக்களின் குழுக்களை கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

மகாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா, அடல், அவஹான், அக்னி மற்றும் ஆனந்த அக்காரா ஆகிய தசநாமி சாதுக்கள், ஆதிசங்கரர் காலத்தில் உருவானதாக கருதப்படுகிறது. கும்ப மேளாக்களின் போது அக்காரா கூட்டமைப்பின் பங்களிப்பு அளப்பரியதாகும்.[3] இந்து சமய மக்களை பிறரிடமிருந்து காப்பதற்கு, கி பி 1565-இல் மதுசூதன சரஸ்வதி என்பவர் ஆயுதம் தாங்கிய சாதுக்களின் அமைப்பை உருவாக்கினார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Akhara Parishad welcomes verdict on Ayodhya". The Hindustan Times. 2010-09-30. Archived from the original on 4 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-10-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Akhara Parishad do not see eye-to-eye with VHP". The Hindu. 2005-06-14. Archived from the original on 2005-07-28. பார்க்கப்பட்ட நாள் 2010-10-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. 3.0 3.1 3.2 Editors of Hinduism Today (2007). What Is Hinduism?: Modern Adventures Into A Profound Global Faith. Himalayan Academy Publications. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-934145-00-5. https://archive.org/details/whatishinduismmo0000unse.