அணிலாடி
- மேலும் தகவல்களுக்கு: அணிலாடி ஊராட்சி
அணிலாடி | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | விழுப்புரம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அணிலாடி கிராமம் என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ளது. செஞ்சி மற்றும் திண்டிவனத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.[1] இந்த கிராமத்தில் இந்து மற்றும் கிறித்தவ மதத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தமிழ் மொழி பேசுகின்றனர். இந்த ஊரில் புகழ் பெற்ற தூய இதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது.[2] அணிலாடி கிராமம் எரம்பட்டு, கொட்டாரம் மற்றும் அணிலாடியை உள்ளடக்கியதாகும். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
பள்ளி மற்றும் மருத்துவமனைகள்
[தொகு]இந்த ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளியும், தூய இதய மேனிலைப்பள்ளியும் (Sacred Heart Higher Secondary School) அமைந்துள்ளன. ஒரு அரசு சுகாதார நிலையமும், தனியார் மருத்துவமனையும் உள்ளன.
போக்குவரத்து
[தொகு]அணிலாடி கிராமத்திற்கு செஞ்சி, திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து நேரடிப் பேருந்து போக்குவரத்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் சென்னை ஆகும்.
தொழில்
[தொகு]இங்குள்ள மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வூரில் ஆசிரியர்களும், ராணுவத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "அணிலாடி கிராமத்தினர் மறியல் செய்ய முடிவு". Retrieved 23 திசம்பர் 2015.
- ↑ "அணிலாடி தூய இதய ஆண்டவர் ஆலயப் பெருவிழா கொடியேற்றம்". Retrieved 23 திசம்பர் 2015.