அச்யுத் சரண் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்யுத் சரண் சௌத்ரி
பிரதாப்கர் இராச்சியத்தைப் பற்றிய ஒரு கல்வெட்டு அருகில் சௌத்ரி அமர்ந்துள்ளார். சுமார் கி.பி .1900கள்.
பிரதாப்கர் இராச்சியத்தைப் பற்றிய ஒரு கல்வெட்டு அருகில் சௌத்ரி அமர்ந்துள்ளார். சுமார் கி.பி .1900கள்.
பிறப்பு(1866-02-05)5 பெப்ரவரி 1866
இறப்பு25 செப்டம்பர் 1953(1953-09-25) (அகவை 87)
மொழிBengali
வகைகள்வரலாறு, மதங்கள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிறீகட்டர் இடிபிரிட்டா

அச்யுத் சரண் சௌத்ரி (Achyut Charan Choudhury) ( 5 பிப்ரவரி 1866 - 25 செப்டம்பர் 1953) ஓர் வங்காளி எழுத்தாளரும் மற்றும் வரலாற்றாசிரியருமாவார். வைணவ இந்து மதத்தைப் பற்றி இவர் பல புத்தகங்களை எழுதியிருந்தாலும், சில்ஹெட் பிராந்தியத்தின் வரலாறு, சிறீகட்டர் இடிபிரிட்டா பற்றிய இவரது பணிக்காக மிகவும் பிரபலமானவர்.

வாழ்க்கை[தொகு]

கரீம்கஞ்சில் உள்ள மொய்னா கிராமத்தில் (அப்போது சில்ஹெட் மாவட்டத்தின் ஒரு பகுதி) ஆதித்ய சரண் சௌத்ரி மற்றும் அவரது மனைவி கோட்டிமோனி ஆகியோரின் மகனாகப் பிறந்தார். [1] இவரது தந்தை ஜாபர்கரின் ஜமீந்தார்களின் வழித்தோன்றல் ஆவார். [2]

இவர் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றபோதே இலக்கியம் மற்றும் வைணவக் கோட்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வரலாறு மற்றும் மதத்தையும் கற்றுக்கொண்டார். பிற்காலத்தில், புரி, பிருந்தாவனம் மற்றும் தகடக்கின் போன்ற புனிதத் தலங்களுக்கு புனித யாத்திரைகள் செய்தபோது குறிப்பிட்ட முக்கியத்துவத்தைப் பெற்றார். கடைசியாக தன் சொந்தச் செலவில் கோயில் ஒன்றையும் நிறுவினார்.[1]

1897 ஆம் ஆண்டில், இவர் சில்ஹெட்டில் உள்ள கிரீஷ் நடுநிலை ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பதர்கண்டியில் உள்ள நிலப்பரப்பின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டில், சௌத்ரி சிறீகட்டர் தர்புன் என்ற மாதாந்திர செய்தித்தாளை நிறுவினார். இருப்பினும் இது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியீடு நிறுத்தப்பட்டது.[1]

இலக்கியப்பணி[தொகு]

ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இவர் தனது மகத்தான படைப்பைத் தொடங்கினார். இது சில்ஹெட்டின் வரலாற்றில் சிறீகட்டர் இடிபிரிட்டா என்று அழைக்கப்பட்டது. உரை இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது. முதல் தொகுதி, 1910 இல் வெளியிடப்பட்டது, பிராந்தியத்தின் வளர்ச்சியை விவரிக்கும் முன் அதன் ஆரம்ப அத்தியாயங்களை சில்ஹெட்டின் புவியியல் மீது கவனம் செலுத்தியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரண்டாவது தொகுதியிலும் இது தொடர்ந்தது, இதில் முக்கிய சில்ஹெட்டி குடும்பங்களின் வம்சாவளிகளும், குறிப்பிடத்தக்க நபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வாழ்க்கை வரலாறுகளும் அடங்கும். சமகால வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார் பிராந்திய வரலாற்றை விவரிப்பதில் அதன் "சிறந்த நுட்பத்தை" பாராட்டியதன் மூலம், இந்த படைப்பு வெளியிடப்பட்ட நேரத்தில் பரவலாகப் பாராட்டப்பட்டது. சிறீகட்டர் இடிபிரிட்டா இன்றுவரை அனைவராலும் பாராட்டப்பட்ட மற்றும் பிரபலமான படைப்பாக உள்ளது.[1]

வரலாறு மற்றும் மதம் தொடர்பான மூவாயிரம் புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட விரிவான தனிப்பட்ட நூலகத்தை சௌத்ரி பராமரித்து வந்தார். இவர் வைணவ இறையியலைப் பற்றிய தொடர் புத்தகங்களையும் எழுதினார். மத நம்பிக்கையின் மீதான இவரது செயல்களால் உள்ளூர் மக்கள் இவரை ஒரு குருவாகக் கருதினர். இவர் 25 செப்டம்பர் 1953 அன்று தனது எண்பத்தேழு வயதில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sharma, Nandalal. Banglapedia: National Encyclopedia of Bangladesh. 
  2. Choudhury, Sujit. The Mutiny Period in Cachar. https://archive.org/details/in.ernet.dli.2015.99952. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்யுத்_சரண்_சௌத்ரி&oldid=3838076" இலிருந்து மீள்விக்கப்பட்டது