இஸ்லாமியச் சோலை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்லாமியச் சோலை இதழில் தோற்றம்

இந்தியாவில் மதுரையில் வெளிவந்த இசுலாமிய இரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மஹதி.

இவரது இயற்பெயர் ஸைய்யது அஹமத். மே 04. 1907ல் பிறந்தவர். இவரது தந்தை சைய்யது அஸ்ரப் உருது, பாரசீக புலமைப்பெற்ற ஒரு கவிஞராக இருந்தார்.

முதலாம் இதழ்[தொகு]

1956ல் வெளிவந்துள்ளது. இடையில் நின்று 1962 சனவரியில் மாத இதழாக வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று[தொகு]

மார்க்க உண்மைகள் மலரும் இஸ்லாமியச் சோலை.

இறுதி இதழ்[தொகு]

இஸ்லாமியச் சோலை ஆசிரியர் ஆகஸ்ட் 2 1974ல் மரணித்துள்ளார். இவர் மரணிக்கும்வரை இடைக்கிடையே இச்சஞ்சிகை வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது.

உள்ளடக்கம்[தொகு]

20ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பெரும்பாலான இஸ்லாமிய எழுத்தாளர்களும், இஸ்லாமிய சஞ்சிகைகளும், மத ரீதியான சிந்தனைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்தன. ஆனால், இச்சஞ்சிகை சமூக எழுச்சி தொடர்பான கருத்துக்களை கொண்டிருந்தன.