ஸ்டாலின் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குப்புசாமி சீனிவாசன் (Kuppuswami Srinivasan 30 மே 1899 – 2 ஜூன் 1975), ஸ்டாலின் சீனிவாசன் (Stalin Srinivasan) என்று பரவலாக அறியப்படும் இவர் ஓர் இந்திய பத்திரிகையாளர் மற்றும் இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார், இவர் 1932 இல் மணிக்கொடி [1] பிரஸ் ஜர்னலின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், இவர் சென்னை மாநிலத்தின் முதல் தலைமை திரைப்பட தணிக்கையாளராகப் பணியாற்றினார். பரவலாக அறியப்படும் குற்றவியல் வழக்கறிஞர் ராதா சீனிவாசன், ஸ்டாலின் சீனிவாசனின் மகள் ஆவார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சீனிவாசன் இந்தியா, சென்னை மாகாணம், தஞ்சாவூர் மாவட்டம், சீர்காழியில் மே 1899 30 இல் பிறந்தார் இவர் சட்டத்தில் பட்டம் பெற்றார் மற்றும் மாநிலக் கல்லூரியில் தனது முதுகலை படிப்பைத் தொடர்ந்தார், தேசியப் பள்ளியின் ஊழியர்களுடன் சேர அதனை நிறுவியசி.ராஜகோபாலாச்சாரியால் அழைக்கப்பட்டார்.

தொழில்[தொகு]

எஸ். சதானந்தின் பிரஸ் ஜர்னலில் மும்பையில் சேருவதற்கு முன்பு சீனிவாசன் டெய்லி பிரஸ் மற்றும் ஸ்வராஜ்யாவில் பணியாற்றினார். இவர் தில்லியில் மத்திய சட்டசபை நிருபராக பணியாற்றினார் . சீனிவாசனின் கட்டுரையை வெளியிட்டதற்காக சதானந்த் சிறையில் அடைக்கப்பட்டபோது, சதானந்தை விடுதலை செய்ய நீதிமன்றம் சென்றார்.

1932 இல், சீனிவாசன் தனது சில நண்பர்களுடன் சேர்ந்து, மணிக்கொடி என்ற தமிழ் இதழைத் தொடங்கினார். மணிக்கொடி ஒரு பத்திரிக்கையாகப் பாராட்டைப் பெற்று இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Ramakrishnan, T. (25 September 2001). "Memories of 'Manikodi'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126053829/http://www.hindu.com/2001/09/25/stories/1325046b.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாலின்_சீனிவாசன்&oldid=3315364" இலிருந்து மீள்விக்கப்பட்டது