பரசுராம கனபாடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரசுராம கனபாடிகள் என்ற பரசுராமன் (15 ஆகத்து 1914 - 21 சனவரி 2016) யஜுர் வேதத்தின் ஒரு பிரிவான சுக்ல யஜுர் வேதத்தில் பண்டிதராக விளங்கியவர். இவரின் தாய் மொழி தமிழ்.

பிறப்பு[தொகு]

பரசுராமன் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள இஞ்சிக்கொல்லையில் பிறந்தார். இவரது தாயார் விசாலாட்சி அம்மாள் தந்தை வெங்கடராம அய்யர்.

வேதபாடம்[தொகு]

1924ம் ஆண்டு ராமேசுவரத்தில் சுப்ரமணிய சாஸ்திரிகள் என்பாரிடம் சமற்கிருத அடிப்படைகளைக் கற்றறிந்தார். 1925-1926 ஆண்டுகளில் மதுரையில் உள்ள ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மற்றும் ராமசுப்ப சாஸ்திரிகளிடம் சமற்கிருத காவ்ய பாடங்களைக் கற்றறிந்தார்.

1933-1937 ஆண்டுகளில் பெங்களூரு ஷாமராஜேந்திர வேதபாடசாலையில் கான்வ குலபதி சிதம்பர கனபாடிகளிடம் சலாக்ஷ்ன சுக்ல யஜுர்வேத கனாந்தம், க்ரிஹ்ய பாஷ்யம், நடாங்கத காவ்யம் மற்றும் சதபத பிராமணம் ஆகியவற்றைக் கற்றார். திருச்சி பழூர் வேதாந்த பாடசாலையில், சிரோன்மணி எஸ். வி. சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அத்வைத வேதாந்த ப்ரஸ்தானத்ரய பாஷ்யத்தை 1938-1942 ஆண்டுகளில் கற்றிறிந்தார். திருவானைக்கா ஜகத்குரு வித்யா ஸ்தானத்தில் பண்டித ராஜபோலாக்கம் ராம சாஸ்திரிகளிடம் 1943 – 44ம் ஆண்டுகளில் தருக்க சாஸ்திரம் கற்றிறிந்தார்.

வேதப்பங்களிப்பு[தொகு]

  1. அகில இந்திய வேத மாநாடுகளிள் கலந்தாய்வு செய்தார்.
  2. சென்னை சூளை மேட்டில் நடைபெற்ற சுக்ல யஜுர் வேத கன பாராயண்ங்களிள் தலைமை வகித்தார். சென்னை, புகளூர், சேங்காளி புரம், அம்பத்தூர், கொல்கத்தா,நாக்பூர், கும்பகோணம் போன்ற இடங்களில் நடைபெற்ற சம்ஹிதா ஹோமங்களில் கலந்து கொண்டார்.
  3. வேதம்படிக்கும் மாணவர்களுக்கு அந்த காலங்களில் புத்தகங்களாக வெளியில் கிடைக்காத பின் வருவனவற்றை கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டார்.1) வேத – பதம், கிரமம்,ஜடா, 2)சதபத பிராமணம் 3) பூர்வ, அபரபிரயோகம், 4) ஆனந்த ராமாயணம், 5) சம்ஹிதா ஹோம பதாதி.
  4. இவர் எழுதிய சதபத பிராமணம் என்ற கையெழுத்துப் பிரதியை புத்தகமாக சாந்திபணி ராஷ்ட்ரிய வேதவித்தியா பிரதிஸ்தாணம், உஜ்ஜைநி, சென்னை முன்னாள் சம்ஸ்கிருத கல்லூரி முதல்வர் எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் முன்னிலையில், தனது வாழ்நாள் முழுவதும் இந்த புத்தகம் அச்சு பிரதியாக வெளி வர உழைத்த நாக்பூர் சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியர் ஜி. டபிள்யு. பிம்லாபுரே அவர்களால் பலவருட முயற்சிக்கு பிறகு வெளியிடபட்டது.

விருதுகளும், பட்டங்களும்[தொகு]

  1. சலக்ஷன கனாந்த – கிருக் – யக்ன வித்வான் - 1934, மைசூர்
  2. ஸ்மார்த்த பிரயோக வித்வான் - 1936, மைசூர்
  3. வேத கோவிதா - 1937, பூனா
  4. வைதீக ரத்ணம் - காசி பண்டித சபா - 1944, வாரணாசி
  5. மஹா பெரிவாள் சதாப்தி விருது - 1980, காஞ்சி
  6. ஜனாதிபதி விருது - இந்தியா - 1998, டில்லி
  7. வேதபாஸ்கரா விருது – வேதபாராயண டிரஸ்ட் - 2000, சென்னை
  8. ஷீர ஷாகர மாகாராஜ் சாமிகள் விருது - அகமத் நகர்
  9. கங்கேஸ்வரானந்தஜி டிரஸ்ட் விருது - 2004, நாசிக்
  10. வேத பாஷ்ய ரத்திணம் விருது - 1964, காஞ்சி
  11. பிரும்மரிஷி – மஹா சாமிகள் - 1990, காஞ்சி
  12. கிருத் யக்ஞ விருது – வேதபரிபாலன சபா - 1997, குடந்தை
  13. வேத பூஷணா விருது – சம்ஸ்கிருத கல்லூரி - 2007, சென்னை
  14. மஹாஸ்சுவாமிகள் 100ம் ஆண்டு புறஸ்கார் - 2007, சென்னை
  15. வேத ஸ்ரீ விபூஷிதா விருது - 2007, சென்னை
  16. ஸ்ரெளதிகுல திலகம் –ஸ்ரீரங்கம் ஆண்டவர் சாமி – 2009, சென்னை
  17. கான்வகுலபதி – செல்வ விநாயகர் டிரஸ்ட் - 2008, அம்பத்தூர்
  18. வேத சாம்ராட் – யாக்ஞவல்கிய ஸபா - 2008, சென்னை
  19. கங்கேஸ்வரானந்தஜி வேதரத்ண புறஷ்கார் - 2010 சென்னை

சிறப்பு[தொகு]

  1. இவர் காஞ்சி மடாதிபதியான ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாடசாலைகளில் படிக்கும் சமயத்தில் சுக்ல யஜுர்வேத பாடங்களை போதித்தார்.
  2. 1998 ஆம் ஆண்டு, பரசுராமனின் சம்ஸ்கிருத பண்டிதத்திற்காகவும் மற்றும் சாஸ்திர அறிவிற்காகவும் அப்போதைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ஜனாதிபதி விருது வழங்கினார்
  3. இவர் எழுதிய சதபத பிராமணம் என்ற கையெழுத்துப் பிரதி அச்சுவடிவில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசுராம_கனபாடிகள்&oldid=3711209" இலிருந்து மீள்விக்கப்பட்டது