விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 5, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

ஒன்பதாவது அலை எனும் ஓவியம் உருசிய ஓவியரான இவான் ஐவாசோவ்ஸ்கியால் 1850இல் வரையப்பட்டதாகும். இது ஓர் இரவு நேரப் புயலுக்குப் பின் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள உடைந்த கப்பலிலிருந்து கடலில் குதிக்கும் காட்சியை விவரிக்கிறது. இங்கு கடலுக்கு மிதமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது அது அச்சுறுத்தத் தக்கதாக இல்லை என்பதையும் உயிருக்குப் போராடுவோருக்கு வாழ ஒரு வாய்ப்பளிக்கும் விதமாகவும் இருப்பதை உணர்த்துகிறது. அலைகள் தொடர்ச்சியாக சிறிது சிறிதாகப் பெரிதாகி இறுதியாக மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்கும். ஒன்பதாவது (அல்லது பத்தாவது) அலையில் அந்தத் தொடர் மீண்டும் தொடங்கும். இதைக் காரணமாகக் கொண்டே இது இப்பெயருடன் அழைக்கப்படுகிறது. இவ்வோவியம் "உருசியாவின் மிக அழகான ஓவியம்" என்றும் சில வேளைகளில் அழைக்கப்படுவதுண்டு.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்