வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புப் படம்





சாளுவன்குப்பம் புலிக்குடைவரை எனும் குடைவரை தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோவில் என்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை என்றும் முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடை என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.
படிம உதவி: