வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புக் கட்டுரை/9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயலின்

வயலின் (பிடில்) என்ற நரம்பு இசைக்கருவி பழங்காலத்தில் பிடில் (fiddle) என்று வழங்கப்பட்டது. இன்று அரங்கிசைக்கு இன்றியமையாத துணைக் கருவியாக (பக்க வாத்தியம்) இது விளங்குகின்றது. இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.