யாதவர் கல்லூரி
| யாதவர் கல்லூரி | |
|---|---|
|
|
|
| நிறுவல்: | 1969 |
| வகை: | தன்னாட்சி |
| அமைவிடம்: | திருப்பாலை, மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
| வளாகம்: | கோவிந்தராஜன் |
| இணையத்தளம்: | www.yadavacollege.org |
யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில் மதுரையில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல், கணனியியல், தகவல் தொழிற்நுட்பம் முதலான அறிவியல் பிரிவிலும், தமிழ்,வரலாறு,வணிகவியல் முதலான கலைப் பிரிவிலும் படிப்புகளை வழங்குகிறது. மற்றும் அரசு உதவி பெறும் இருபாலர் கல்லூரி.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ல் தமிழக அரசின் உதவியுடன் யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது. யாதவ சமுதாயம் மட்டுமின்றி பல பின்தங்கிய சமுதாய மாணவர்களின் மேல்படிப்புக் கனவை நனவாக்கிவருகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த கல்லூரி 2008ம் ஆண்டுமுதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று பல துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது
அமைவிடம் [தொகு]
இந்தியாவின் தமிழகத்தில் மதுரை, மேற்குப்புறநகர் பகுதியைச் சேர்ந்த திருப்பாலை கிராமத்தில் நத்தம் சாலையில் ஊமச்சிகுளம் அருகே அமைந்துள்ளது.
முன்னாள் மாணவர்கள் [தொகு]
- க. திருவாசகம், சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர்.